வியாழன், 28 நவம்பர், 2024
ஏன் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்?
செவ்வாய், 19 நவம்பர், 2024
திங்கள், 18 நவம்பர், 2024
இந்திய அரசு ரகசியங்களை திருடி 6 நாடுகளுக்கு விற்ற கோவை தொழிலதிபர்
இந்திய அரசு ரகசியங்களை திருடி பல வெளிநாடுகளுக்கு விற்ற குமார் நாராயண்
இந்திய பிரதமர் அலுவலகத்தின் ரகசியத் தகவல்கள் பிரான்ஸ், போலந்து, செக்கோஸ்லோவாகியா போன்ற நாடுகளின் ஏஜெண்டுகளுக்கு விற்கப்பட்டன.
கடந்த 1985-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தியின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் ராஜினாமா செய்தார்.
இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்ஸ் டெல்லியில் இருந்து தனது தூதரை திரும்பப் பெற்றது. செக்கோஸ்லோவாகியா, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த தூதர்கள் டெல்லி தூதரகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
உளவு ரீதியிலான முறைகேடு ஒன்று, இதன் பின்னணியில் இருந்தது. அந்த முறைகேடு, இந்தியாவின் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பானது. 'பிரதமர் அலுவலகத்தில் இதுவொரு கரும்புள்ளி' என இந்திய ஊடகங்கள் எழுதின.
இதில், ராஜீவ் காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டரின் தனிச் செயலாளர் என்.டி.கேர், பி.ஏ. மல்ஹோத்ரா மற்றும் அவரது பணியாள் கூட சம்பந்தப்பட்டிருந்தனர்.
ஜனவரி 16-17 அன்றைய தின இரவு, புலனாய்வுப் பணியகத்தின் (IB) 'உளவு பார்த்தலை தடுக்கும் பிரிவு' (Counter Intelligence Department) என்.டி.கேரை முதலில் கைது செய்தது.
காலையில், பிஏ மல்ஹோத்ரா மற்றும் பிரதமர் அலுவலக பணியாள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டின் கோவையில் பிறந்தவரான தொழிலதிபர் குமார் நாராயண் மூலம் ரகசிய அரசு ஆவணங்களை வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சில ஊழியர்கள், இந்திய தொழிலதிபர் குமார் நாராயண் மூலம் வெளிநாட்டு முகவர்களுக்கு அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது
சுருக்கெழுத்தர்கள், தனிச் செயலாளர்களிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன
கடந்த 1925 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த குமார் நாராயண் 1949 ஆம் ஆண்டு டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் சுருக்கெழுத்தராக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் அவர் ராஜினாமா செய்து பொறியியல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான எஸ்எம்எல் மானெக்லால் (SML Maneklal) நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட'எ சிங்குலர் ஸ்பை தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் குமார் நாராயண்' (A Singular Spy The Untold Story of Kumar Narayan) என்ற புத்தகத்தில், எழுத்தாளர் கல்லோல் பட்டாச்சார்ஜி, "உரிம அனுமதி ஆதிக்கத்தின் போது (லைசென்ஸ் பெர்மிட் ராஜ்), அரசாங்கத்தின் பின்னணியில் பணிபுரியும் சுருக்கெழுத்தர்களுக்கு பல்வேறு அமைச்சகங்களில் ரகசியத் தகவல் கிடைத்தது" என எழுதியுள்ளார்.
மேலும், "சுருக்கெழுத்தர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை விற்பனை செய்யத் தயாராக இருந்தால், அவர்கள் வெறும் தட்டச்சு செய்பவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள் என்பதை நாராயண் அறிந்திருந்தார்" என எழுதுகிறார்.
குமார் நாராயணுக்கு முக்கிய அமைச்சகங்களில் நட்பு
கடந்த 1959 இல் அரசு வேலையை விட்டு வெளியேறிய பிறகு, குமார் அரசாங்கத்தில் சிறிய பதவிகளில் பணிபுரியும் நபர்களின் ரகசிய வலையமைப்பை உருவாக்கினார்.
இதுமட்டுமின்றி, பிரான்ஸ், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா, சோவியத் யூனியன் மற்றும் போலந்து ஆகிய ஆறு நாடுகளின் தூதரகங்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு ரகசிய மற்றும் முக்கிய ஆவணங்களை வழங்கத் தொடங்கினார்.
ஜனவரி 28, 1985 இன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தித்தாளில் குமார் நாராயண், "வெளிநாட்டில் ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1985 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகளாக சுமார் இரண்டாயிரம் பேர் பணிபுரிந்தனர், அவர்களில் குமார் நாராயணும் சேர்க்கப்பட்டார்.
"குமாருக்கு பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் அலுவலகங்கள் உட்பட ஒவ்வொரு முக்கிய அமைச்சகத்திலும் நண்பர்கள் இருந்தார்கள். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல சொத்துக்களை வாங்கினார். அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவார்" என, கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
இந்த வழக்கு விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பி.கோபாலன், அவரிடம் ஒரு தந்தையை போன்று நடந்துகொண்டதாக கண்டறியப்பட்டது.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், தான் இறந்தால், அதுகுறித்து குமார் நாராயணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார் அவர்.
தகவல் கசிவு வெளியே வந்தது எப்படி?:
டெல்லியில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கூட்டம் நடந்த போதுதான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாக முதல் தகவல் கிடைத்தது.
கூட்டம் தொடங்கியவுடன், இலங்கை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் 'ரா' உளவு முகமையின் மிக ரகசிய ஆவணத்தை காண்பித்தனர். அதில், இலங்கை பற்றி இந்திய அரசு என்ன நினைக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங் ஆகியோர், பிப்ரவரி 17, 1985 இல் 'தி வீக்' இதழில், "இந்தியாவுக்கு அதுவொரு சங்கடமான ஆவணம். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்காக எழுதப்பட்ட ஆவணம், எப்படி இலங்கையை சென்றடைந்தது என புலனாய்வு அதிகாரிகள் திகைத்துப் போயிருந்தனர்" என எழுதினர்.
அந்த ஆவணம் மூன்று பிரதிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தன. இரண்டு பிரதிகள் ரா உயர் அதிகாரிகளிடம் இருந்தது, ஒரு பிரதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்த உயர் ரகசிய ஆவணம் எப்படி கொழும்புவை அடைந்தது என்பதை அறிய உளவுத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டினர்.
வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங், "பிரான்ஸ் அதிகாரி ஒருவர் அந்த ஆவணத்தைப் பெற்று, நாராயணின் தொடர்புகள் மூலம் இலங்கைக்கு வழங்கியது பின்னர் விசாரணையில் தெரியவந்தது." என்று கூறுகின்றனர்.
குமார் நாராயணுக்கு பிரான்ஸ் உளவுத்துறையுடன் தொடர்பு :
பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் அமைந்துள்ள 'சென்ட்ரல் விஸ்டா' கட்டடத்தின் இடது புறத்தில், சவுத் பிளாக் அருகே போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் உச்சக்கட்ட உஷார் நிலை செயல்பாட்டில் இருந்தது. அதிகாரத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு நபரும் சந்தேகத்திற்குரியவர்களாக இருந்தனர்.
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் காலம் தொடங்கியது.
ஆனால், அதையும் மீறி பிரதமர் அலுவலகத்துடன் குமார் நாராயணின் தொடர்பு வெளியே தெரியவரவில்லை. குமார் நாராயண் தற்செயலாக போலீசாரிடம் சிக்கினார்.
சிபிஐயில் பணிபுரிந்த வேத் பிரகாஷ் சர்மா, தனது நண்பர் சுபாஷ் சர்மாவின் புகைப்பட நகல் எடுக்கும் கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
கடையில் வெளிச்சம் அதிகமாக இருந்தது. திடீரென அவரது கண்கள் மத்திய புலனாய்வுப் பணியகம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பக்கத்தின் நகலை பார்த்தது.
புலனாய்வுப் பணியகம் அதன் ஆவணங்கள் எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காது என்பதை வேத் பிரகாஷ் தனது அனுபவத்தில் அறிந்திருந்தார்.
புலனாய்வுப் பணியகத்தின் முக்கியமான ஆவணங்களின் நகல்கள்
"வேத் பிரகாஷ் அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அதனை நகலெடுத்த சுபாஷ் ஷர்மா அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார். உளவுத்துறையின் ஆவணங்களில் பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசு தலைவர் மாளிகை என குறியிடப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். இந்த ஆவணங்கள் அசாம், காஷ்மீர், கனரக தொழில்துறை மற்றும் பாகிஸ்தான் தொடர்பானவை" என கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
இதையடுத்து, அந்த ஆவணத்தை நகல் எடுத்தவரை சந்திக்கும் நம்பிக்கையுடன் தினமும் தனது நண்பரின் கடைக்கு செல்ல ஆரம்பித்தார் வேத் பிரகாஷ்.
இது பல நாட்களாக தொடர்ந்தது. இந்த ஆவணங்களில் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பற்றிய உளவுத்துறையின் தகவல்கள் அடங்கியிருந்தன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ரகசிய ஆவணங்கள் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள கன்னௌட் பிளேஸ் எனும் பகுதியில் நகலெடுக்கப்பட்டன.
"வேத் பிரகாஷ் முழு நம்பிக்கையுடன் இருந்தபோது, புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குநருமான ஜே.என். ராயைத் தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் கூறினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
ராய், அதிகாரிகள் சிலரை அக்கடைக்கு விசாரணைக்காக அனுப்பினார். ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
உளவு மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அடையாளம் காணுதல் :
ஹெய்லி சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் வந்தன
இதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேத் பிரகாஷ் விரும்பினார். ஒருநாள் அந்த பணியாள் கொண்டு வந்த ஒரு தாளை திருடி தன்னுடைய மேல்சட்டையின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
அந்த தாளை படித்தபோது அது புலனாய்வுப் பிரிவு பற்றியது என தெரிந்தது. இப்போது அவர் தனது சந்தேகம் சரியானது என்பதில் உறுதியாக இருந்தார்.
அங்கிருந்து நேராக தனது முன்னாள் உயரதிகாரி ஜே.என்.ராயிடம் சென்றார். இதைப் பார்த்து துள்ளிக் குதித்த ராய், முழு விஷயத்தையும் விசாரிக்க முடிவு செய்தார்.
அவர்களிடம் வேத் பிரகாஷ், 'கடையின் உரிமையாளர் இந்த பணியில் ஈடுபடவில்லை, எனவே அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கூறினார். புலனாய்வுப் பிரிவினர் சாதாரண உடையில் அக்கடையைக் கண்காணிக்கத் தொடங்கினர்.
"அடுத்த நாள் பணியாள் நகலெடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறியபோது, வேத் பிரகாஷ் உளவுப் பணியகத்தை சேர்ந்த நபரை அவருக்குப் பின்னே அனுப்பினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
மேலும், "அந்த நபர் எஸ்.எல்.எம் மானெக் லாலின் ஹெய்லி ரோடு அலுவலகத்தில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிந்ததும், அந்த அலுவலகத்திலும் 24 மணிநேர கண்காணிப்பு போடப்பட்டது. பல நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்" என எழுதினார்.
நாராயணின் அலுவலகத்தில் ரெய்டு:
இந்தக் கைதுகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனால், 'தி இந்து'வின் ஜி.கே.ரெட்டிக்கு இதுபற்றித் தெரிந்து, இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டார்.
பிப்ரவரி 4, 1985 இல், குமார் நாராயணை எஸ்.எம்.எல் மானெக்லால் வேலையில் இருந்து நீக்கினார்.
குமார் நாராயண் தனது 15 பக்க வாக்குமூல அறிக்கையில், இந்த உளவு வழக்கில் குறைந்தது மூன்று நாடுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பணத்திற்கு ஈடாக அவர்களுக்கு ரகசிய ஆவணங்களை அளித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
தான் கொடுத்த தகவலை தனது முதலாளி மானெக்லால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக குமார் கூறினார்.
பி.சி. அலெக்சாண்டர் ராஜினாமா:
இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"ஜனவரி 18, 1985 முதன்மைச் செயலாளராக எனது பணிக்காலத்தின் இருண்ட நாள்," என்று அவர் தனது சுயசரிதையான 'தி காரிடார்ஸ் ஆஃப் பவர்' இல் (Through the Corridors of Power) எழுதினார்.
அதில், "என் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை சில வணிக நிறுவனங்களுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் எனது தனிப்பட்ட செயலாளரும் மூன்று தனிப்பட்ட கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி அன்று காலை என்னிடம் கூறப்பட்டது." என எழுதினார்.
"இந்த விஷயத்திற்கு தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்வதுதான் என்னுடைய உடனடி எதிர்வினையாக இருந்தது" என அவர் எழுதியுள்ளார்.
"நான் மூன்று மணிக்கு பிரதமரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவருக்கு அருகில் அவரது மூத்த சகாக்கள் நரசிம்மராவ், வி.பி.சிங், எஸ்.பி.சவான் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நான் ராஜீவ் காந்தியிடம் உங்களை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் சென்றவுடன், பிரதமரிடம் அனைத்தையும் கூறி, எனது ராஜினாமா குறித்து தெரிவித்தேன்" என்றார்.
தூதரை திரும்ப அழைக்குமாறு பிரான்ஸை கேட்டுக்கொண்ட டெல்லி:
பாரிஸில் உள்ள இந்திய தூதர் நரேந்திர சிங்குக்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரை சந்தித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறும், டெல்லியில் உள்ள தங்கள் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாக பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் தகவல் அனுப்பப்பட்டது.
சின்மோய் கரேகான் தனது சுயசரிதையான 'சென்டர்ஸ் ஆஃப் பவர்' இல், "பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் மித்திராண்ட், 'என்ன நடந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு இடையூறாக இருக்க அனுமதிக்கப்படக் கூடாது' என, ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22, 1985 அன்று ராஜீவ் காந்தியைச் சந்திக்க தனது சகோதரனை டெல்லிக்கு அனுப்பினார் மிட்டல். தான் வருத்தமாக இருப்பதை அவர் இந்த வழியில் கூறினார். ஆனால் அதை அவர் வார்த்தையாக கூறவில்லை.
இந்த மோசடியில் ஈடுபட்ட போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஊழியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், நரசிம்ம ராவ் ஆலோசனையின் பேரில் சோவியத் தூதரகத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
குமார் நாராயணின் மரணம்:
குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் எதிரான விசாரணை 17 ஆண்டுகள் நீடித்தது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களில் 4 பேர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால், குமார் நாராயண் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 20, 2000 அன்று இறந்தார்.
குமார் நாராயணை பற்றி 'எ சிங்குலர் ஸ்பை தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் குமார் நாராயண்' என்ற புத்தகத்தை எழுதிய கல்லோல் பட்டாச்சார்ஜி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Thanks to BBC
ஆதாரம்:
https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/articles/cy0l4jnrkp7o.amp
புதன், 13 நவம்பர், 2024
ஞாயிறு, 10 நவம்பர், 2024
பெரியார் என்ன கிழித்தார் ?
பெரியார் என்ன கிழித்தார்?
பெரியாரின் சாதனைகள் :
முன்பெல்லாம் எங்க ஊரில் இரண்டு சக்கர வாகனத்தில் தாழ்த்தப்பட்டோரை அமர வைத்து கொண்டு போக மாட்டார்கள்! ஆனால் இப்ப தாழ்த்தப்பட்டோர் ஓட்ட இவரு பின்னால் அமர்ந்து அவர் தோளை பிடித்துக் கொள்கிறார்!
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் கணவர் இறந்தால் மனைவிக்கு வெள்ளைப் புடவை தந்து சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் இப்ப அந்த பெண்ணே அடுத்த தலைமுறைக்கு தாலி எடுத்து கொடுக்கும் அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் பெண் வயதுக்கு வந்தா குடிசை கட்டி ஊர் முழுவதும் பத்திரிகை வைத்து அந்த பெண்ணை காட்சிப் படுத்துவார்கள் ஆனால் இப்ப பல தனவந்தர்கள் அப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று கூட நினைக்க மறுக்கிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் பழனியம்மாள் பள்ளியில் பத்தாவது படித்தால் போதும் என்று 17 வயதில் திருமணம் செய்து விடுவார்கள் ஆனால் இப்ப பெண்ணை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி கை நிறைய சம்பளம் வாங்கி சந்தோஷம் படுகிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் திருமண நிகழ்வுகளில் பெண்ணை தரையில் அமர வைத்து ஆண்களுக்கு பென்ஞ்ச் போட்டு உட்கார வைப்பார்கள் ஆனால் இப்ப பெண்களை முன் வரிசையில் அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் தாழ்த்தப்பட்டோரை சாதி பெயரைச் சொல்லி அழைப்பார்கள் ஆனால் இப்ப பெயரைச் சொல்லி அழகாக அழைக்கிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் ஆடு மாடு செத்தால் காலனி ஆட்களை அழைத்து தூக்கி கொண்டு போய் உணவாக உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். விஞ்ஞானம் அறிவியல் மனித நேயம் கற்றதனால் இப்ப அது அவர்கள் உடம்புக்கு ஆகாது என்று குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் நவீன உடை அலங்காரம் போட்டால் கண்ட படி ஆண்கள் வார்த்தை பேசுவார்கள். ஆனால் இப்ப Tattoo போட மெகந்தி வரைய பெற்றோர்களே அழைத்து போய் அழகு நிலையத்தில் காத்திருந்து வெளியே வந்த பெண்ணை ரசித்து கூட்டி வருகிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
ஆண் மனைவியை இழந்தால் உடனே திருமணம் ஆனால் பெண் காலம் முழுவதும் விதவைக் கோலத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். காலம் மாற தனது மகனுக்கு இரண்டாம் தாரமாக பெண் தேடுகிறார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
முன்பெல்லாம் எங்க ஊரில் பேருந்தில் தேநீர் கடைகளில் சரிசமமாக நடத்த மாட்டார்கள்.
ஆனால் இப்ப இரட்டை டம்ளர் இல்லாமல் ஒழித்து விட்டார்கள்.
ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!
(கோபிசெட்டிபாளையம் மருத்துவர் சு. விஜயகுமார் அவர்களின் பதிவு)
வெள்ளி, 8 நவம்பர், 2024
தவறான கேள்விகளுக்கு தக்க பதில்கள்
தவறான கேள்விகளுக்கு தக்க பதில்கள்
WhatsApp -ல் எனக்கு வந்த கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள்
மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:
1. பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.
தமிழ் முக்கியம், ஆங்கிலமும் முக்கியம். ஆனால் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மாற்றாக ஹிந்தியை நுழைத்ததை / திணித்ததை/ திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம்.
இப்பொழுதே நம் பிள்ளைகளின் தமிழ் வாசிப்பு, எழுத vocabulary இல்லை.
2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.
ஓவன்ல சமைப்பது, A/C அறையில் வாழ்வதும் சாமான்யன் இல்லை. அவர்கள் வாழ்வும் மற்றவரை விட பாதுகாப்பானது. அணு மின் திட்டம் ஆபத்தானது. உலகில் பல நாடுகள் அதை கை விட்டு விட்டு மாற்று உற்பத்திக்கு சென்று கொண்டிருக்கின்றன. நாம் அதை எதிர்ப்பது சாமான்யர்களுக்காகவே. சாமான்யர்களின் அழிவில் (அ) சாமான்யர்களின் ஆபத்தில் மற்றவர்கள் வாழ செய்வதையே எதிர்க்கிறோம்.
3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.
மீத்தேனிலிருந்தும் கேஸ் எடுக்கலாம்.
பெட்ரோலியம் பொருட்களிலிருந்தும் கேஸ் எடுக்கலாம். நம் விவசாய பூமியை அழிக்கவே மீத்தேன் திட்டம் எனில் அதை அனைவரும் எதிர்க்கத் தானே வேண்டும்
4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.
3-ஆம் கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும்
5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.
எல்லோரும் விவசாயம் செய்ய முடியாது. விவசாயம் செய்பவர் மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட வேண்டியதில்லை. விவசாய உற்பத்தியில் கிடைத்தவற்றை உண்ணுபவர் அனைவருமே ஆதரவு தர வேண்டும்
6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.
கேள்வி எண் 5-க்கான பதிலே இதற்கும் பொருந்தும்
7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.
சாதி ஒழிப்பு / சாதி மறுப்பு வேறு, சாதி இயக்கம் வேறு
கீழே இருந்த நாம், மேலே வருவது பொறுக்காமல் செயல்படுவோர் செய்வது சாதி ஒழிப்பு என்ற போர்வையில் இடஒதுக்கீடு ஒழிப்பு.
இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல. கால் ஊனமானவனையும், நல்ல கால் உள்ளவனையும் ஒரே ஓட்டப் பந்தயத்தில் விடும் போது ஊனமானவனுக்கு தரும் முன்னுரிமையே இட நதுக்கீடு
அதை அனுபவித்து படிப்பும், பதவியும் பெற்றோர் இதை எதிர்ப்பதுதான் வேடிக்கை அவர்கள் தங்கள் பணிகளை துறப்பார்களா? / அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை விட்டு விடுவார்களா? புரிந்து கொள்ளுங்ள்.
8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.
பக்தி என்பது வேறு
மதவெறி என்பது வேறு.
பிறர் வாழச் செய்வது பக்தி
பிறர் வாடச் செய்வது வெறி
மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதிருத்தல் மட்டுமல்ல பிற மதத்தை பகடி செய்யாதிருத்தலும்
பக்தி பகல் வேஷமாவதை எதிர்ப்பின் அது இந்து மதத்தை இழிவுபடுத்துவது என்பதாகிறது.
9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலுக்கு எதிராக போராட்டம்.
இது கோழி முதலா? முட்டை முதலா? என்பது போன்றது
ஊழல் என்பது ஓழிக்க முடியாது. எளிதில் / விரைவில் எதையும் சாதிக்க குறுக்கு வழி தேடும் நாம் அனைவரும் ஊழல்வாதிகளே.
10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.
நம் காலத்தில் சிகரெட் குடிப்பது ஆண்மை. இன்று அதுவே மது குடிப்பது. அரசாங்கமே மது வருமானத்தில் நடக்கிறது. இது கேடு கெட்ட நிலை. நம் வலிமையாக எதிர்க்காததல் அதை விற்பவனே எதிர்ப்பது போல் நடிக்கிறான்
11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.
கேள்வி எண் 10-ன் பதிலே பொருந்தும்
12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.
வரிகள் பல வகை உண்டு. தெரிந்தும், தெரியாமலும் வரிகள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். (உ-ம்: சொத்து வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி Etc) இதில் சொல்வது வருமான வரி. இங்கு யாரும் உண்மையாக வரி கட்டுவதில்லை. நான் உட்பட . வரி விலக்கை தேடி தேடி உபயோகிக்கிறோம். வாங்கிய வரிக்கான வளர்ச்சியைக் கேட்கிறார்கள். நாட்டு வளர்ச்சிக்கு திட்டம் தீட்டி தன் வீட்டு வளர்ச்சியை செய்து கொள்கிறார்கள் கேட்கக் கூடாதா?
13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.
யார் செய்வது தவறு?
சரி, தவறு எல்லாமே ஆளுபவர்களை பொறுத்து மாறும். இன்று சரி என்பது நாளை தவறு என மாறும்.
அரசு செய்வதல்லாம் சரி என்னு சொல்லும் சட்டம், சாமன்யன் செய்தால் தவறு என தண்டிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா?
அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.
இது முழுக்க முழுக்க பாஜக ஆதரவில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
சரி காங். இவ்வளவு நாள் தப்பா ஆட்சி செய்து விட்டான். பாஜக வந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. உருப்படியாய் செய்தவை எத்தனை?
மதவாத அரசியலே அதன் அஜெண்டா , அதை அடைய அது எதுவும் செய்யும். பதவி பலத்தில், பண பலத்தில் மிரட்டும். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும். ஆட்சிகளை கவிழ்க்கும். அனைத்தையும் ஓப்பனாகவே செய்யும். கேட்டால் தேச விரோதி ஆதரித்தால் தேச பக்தி
தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!*
என் பதில்களை படித்தமைக்கு நன்றி
எதையும் பத்திரிக்கை, தொலைக்காட்சி பார்வையில் மேம்போக்காக அணுகாதீர்
நிறைய புத்தகங்கள் வாசியுங்கள்
ஆழ யோசியுங்கள்
நன்றி
வாழ்க வளமுடன்
பயணப் பயனாளிகளின் நாயகன் கலைஞர்
பயணப் பயனாளிகளின் நாயகன் கலைஞர்
வாசித்த நாள் : 15.12. 2020
இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பதிவு எழுதிய நாள் : 13.12.2020
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிக்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் பல இயக்கங்களாக பிளவு பட்டு நிற்கிறது.
எப்போதும் இல்லாத சூழ்நிலையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர் வர இருக்கின்றது.
மேலே சொல்லப்பட்டுள்ள இரு கருத்துக்களும் எப்பொழுதுமே காலம் தவறாமல், வார்த்தை மாறாமல் சொல்லப்பட்டு வருகிறது.
உண்மைதான்.
தமிழகத்தை மதவெறி அரசியல் சூழ்ந்திருக்கிறது.
இந்தியாவின் எல்லா மாநிலத்துக்குள்ளும் காலூன்றி விட்ட பாஜக தமிழகத்திலும் காலூன்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.
இது ஊரறிந்த இரகசியம்.
நேரடியாக இறங்கி தன் நெடுநாள் இலட்சியங்களை அடைய முடியாது என்பதால் பதுங்கி இருந்து, திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.
ஆளும் அதிமுக அரசை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது.
உதிரிக் கட்சிகளை குத்தகைக்கு எடுத்து கம்பெனி ஆர்ட்டிஸ்டுகளாக
வைத்திருக்கிறது.
சில சிறு கட்சிகளை / அமைப்புக்களை உருவாக்கி விட்டிருக்கிறது.
எதிர்கட்சியின் கூட்டணிக்குள் கூட தன் .--- வைத்திருக்கலாம்.
ஏனெனில் காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது ஜனசங்கக் கொள்கை கொண்ட அனைவரும் ஜனசங்கத்திற்கு வந்து விடவில்லை. பலரை காங்கிரசுக்குள்ளேயே தொடர்ந்து இருக்க ஜனசங்கம் விட்டு வைத்தது. அது இன்றும் தொடர்கிறது .
இன்னமும் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே பாஜக - வுக்கு பணியாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதனால்தான் கட்சியை கட்டுக்குள் கொண்டு வர ராஜீவ், ராகுல் போன்றோரால் முடியவில்லை.
தமிழகத்தில் இப்பொழுது பாஜக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கமல், ரஜினி, சீமான் போன்றவர்களின் உதிரி கட்சிகளைக் கொண்டு தமிழக மக்களை குழப்பத் திட்டமிடுகிறது.
தங்கள் கட்சி தனியாக நின்றோ அல்லது ஒருவருக்கொருவர் கூட்டணி சேர்ந்து நின்றோ வெற்றி பெற்று தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
ஆனாலும் தனித்தனியாகவோ அல்லது சிலருடன் கூட்டணி வைத்தோ தேர்தலில் நிற்பார்கள்.
தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் தேர்தலில் நிற்கிறார்கள்.
வெகு ஜனம் தெளிவாக இருக்கக்கூடாது என்று குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம்.
இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,
இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள்.
தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் ஏன் இவர்களில் தேர்தலில் நிற்கிறார்கள்?
அவர்களின் இலக்கு யார் வெல்ல வேண்டும் என்பதல்ல.
யார் வென்று விடக் கூடாது என்பது தான்
இந்த ஒற்றைக் கொள்கைக்காக திரைமறைவில் ஒன்றுபட்டு செயல்பட இருக்கிறார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் பலரும் பல கட்சிகளில் இருக்கலாம். அது ஜனநாயகம்.
ஆனால் முழு இஸ்லாமிய சமுதாயமும் ஒரு ஒற்றைக் கொள்கைக்காக செயல்பட வேண்டிய தருணம் இது.
இப்பொழுது யாருக்கு வாக்களிக்கக் கூடாது? என்பதை விட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம்.
பாஜக வின் பொம்மை அரசாக அதிமுக செயல்படுகிறது.
பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும் கூட பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சியான திமுகவுக்கு எதிராகவே அதன் கம்பெனிக் கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் இந்தக் கட்சிகள் இறுதியில் அந்தப் பிரச்னையின் காரண கர்த்தாவாக ஆளும் கட்சியான அதிமுகவை குறை சொல்லாமல் பத்தாண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத திமுகவையே கை காட்டுகின்றன.
பாஜகவுக்கு எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்பது போல பாஜக கம்பெனி கட்சிகளுக்கு திமுக.
வளர்ச்சி என்ற போலி பிம்பத்தை விஸ்வரூபமாகக் காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக அரசால் இன்றைக்கு அனைத்து துறைகளும் பின்தங்கிப் போய் கொண்டேதான் இருக்கின்றன.
பாஜகவின் இலக்கு அகண்ட இந்துஸ்தானம், இஸ்லாமிய எதிர்ப்பு / ஒழிப்பு.
இந்த இந்துத்துவா அரசியல் கொள்கையை அவர்கள் விட்டு விடத் தயாரில்லை. விட வே மாட்டார்கள்.
இதற்காக இவ்வளவு காலம் பொறுத்திருந்து காலங்காலமாக திட்டங்கள் தீட்டி, அவற்றை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அஜெண்டாவில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவே செய்வார்கள். செய்து கொண்டும் இருக்கிறர்கள்.
இவற்றிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற பல அம்சங்கள் பாஜகவின் அஜெண்டாவில் உள்ளன.
இரு நாட்களுக்கு முன்னர் "கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட CIA. NRC சட்டம் ஜனவரியில் மீண்டும் செயல்படுத்தப்படும் " என்ற பாஜக அரசின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எதிரியைத் தேடவில்லை.
ஆனால் நம்மை எதிரியாகப் பார்த்து நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக நிற்பவர்கள் பக்கம் இப்பொழுது நாம் நின்றாக வேண்டும்.
பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சி தமிழகத்தில் திமுகதான்.
இப்பொழுது அதை சமுதாயம் ஆதரித்தேயாக வேண்டிய சூழல்.
மற்ற கட்சிகள் பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும், பாஜக குறிவைத்து தாக்குவதும், எதிர்ப்பதும் என்னவோ திமுகவை மட்டும்தான்.
அதனால்தான் திமுகவை இஸ்மாயியர்கள் ஆதரித்தேயாக வேண்டும்.
நாளை காலச் சக்கர ஓட்டத்தில் சூழல் மாறி திமுக, பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டாலும் கூட நமக்காக திமுக குரல் கொடுக்கும். இது கடந்த கால அனுபவம். (கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக நேர் எதிராக செயல்பட்டது என்பதும் கூட நமக்கு ஒரு பாடமே)
ஒரு வேளை நாளை நமக்கு எதிராக திமுக செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ் நாம் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அதாவது நாளை நடப்பதை அன்றைக்கு பார்த்துக் கொள்வோம்.
ஆனால் இன்று செய்ய வேண்டியதை செய்தாக வேண்டும்.
இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் தமக்கு கிடைக்காது என்பது தெளிவாகவே பாஜக -வினருக்குத் தெரியும். அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.
அவர்கள் திட்டம் ஓட்டுக்கள் சிதற வேண்டும். சிதறலில் மீதமாகும் குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் அடிமை அ தி மு க வெல்ல வைத்து தங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதித்துறை மற்றும் தொலைக்காட்சி, பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் எப்படி ? யாருக்காக செயல்படுகின்றன? என்பதை அனைவரும் அறிவோம்.
இவற்றைக் கொண்டு இஸ்லாமிய சகோதர அமைப்புக்களை பிரித்து ஒருவருக்கொருவர் எதிர்த்து செயல்பட வைக்கும் தந்திரங்களை ஆளும் பாஜக செய்யும்.
அதனால் பலனடையப் போவது பாஜக தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பணம், பொருள், பதவி இவற்றிற்காக எதையும் செய்வோர் எங்கும் உண்டு.
இத்தனை காலம் சும்மா கிடந்தவர்கள் திடீரென கொள்கை முழக்கமிட்டு, வீராவேசம் பேசிக் கொண்டு தம்மை நோக்கி "அழைப்பார்கள்".
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
நம்மைக் கூட்டி, அந்தக் கூட்டத்தைக் காட்டி, நம்மை விலை பேசி விற்று "சூட்கேஸ்" பார்த்து விடுவார்கள் நம் சமுதாயக் காவலர்கள்.
அவர்களை கவனமாக நாம் கடக்க வேண்டும், தவிர்க்க வேண்டும்.
அவர்களுக்குப் போடும் ஓட்டும், அதிமுகவுக்குப் போடும் ஓட்டும் ஒன்று தான்.
அதிமுகவுக்காக நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கே போடும் ஓட்டாகவே அமையும்.
ஏனெனில் அதிமுகவை வைத்து நிழல் ஆட்சியை நடத்தி வருவது பாஜகதான் என்பதும் ஊரறிந்த இரகசியம்
இனிமேலும் தமிழகத்தில் அதையேதான் பாஜக செய்யும்.
ஆகவே இஸ்லாமிய சமுதாயம் குறைந்த பட்ச கொள்கை ஒப்பந்த அடிப்படையில் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டிய , கட்டாய சூழ்நிலையில் இருக்கிறது
சமுதாயத்தின் பொது பிரச்னைகளை, கோரிக்கைகளை திமுக கூட்டணியிடம் இப்பொழுது வைத்தாக வேண்டும்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற முஸ்லீம்களை குறி வைத்து இயற்றப்பட்ட சட்டங்களை தேசிய அளவில் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். மாநில அளவில் அவற்றை அமுல்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% சதவிகித இட ஒதுக்கீடை 5% சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சியிலும், சட்டசபை, பாராளுமன்றம் போன்றவற்றிலும் முஸ்லீம்களுக்கு கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
இது போன்ற பொதுவான பல கோரிக்கைகளை முன் வைக்கலாம்
என்னை விட விபரமறிந்தவர்கள் இயக்கங்களின் தலைமைகளில் உள்ளனர்.
அவர்கள் சமுதாயத்திற்காக சொந்த விருப்பு, வெறுப்புக்களை, ஈகோவை ஒதுக்கி விட்டு ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும்
"இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
இன்ஷா இவை நடைபெற நாம் முயற்சி செய்வோம்.
வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக.
கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று ஏன் சொல்லுகிறோம்?
கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று ஏன் சொல்லுகிறோம்?
திங்கள், 4 நவம்பர், 2024
கலைஞர் பதித்த தடங்கள்
கலைஞர் பதித்த தடங்கள்
.jpg)
ரஜினியின் குடும்பம்
ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...
-
திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றுச் சாதனைகள் கலைஞர் ஆட்சியில் பாகம் 1 இது என் கல்லூரி வகுப்பு தோழர் துங்காவி JRK (மடத்துக்குளம் தொகுதி E...
-
இதுதான் கடைசி தேர்தலா ? அனேகமாக இதுதான் நாம் சந்திக்கும் கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம் . ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே சட்டம் என்ற...

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)