ஞாயிறு, 10 நவம்பர், 2024

பெரியார் என்ன கிழித்தார் ?

பெரியார் என்ன கிழித்தார்?


பெரியாரின் சாதனைகள் :

முன்பெல்லாம் எங்க ஊரில் இரண்டு சக்கர வாகனத்தில் தாழ்த்தப்பட்டோரை அமர வைத்து கொண்டு போக மாட்டார்கள்! ஆனால் இப்ப தாழ்த்தப்பட்டோர் ஓட்ட இவரு பின்னால் அமர்ந்து அவர் தோளை பிடித்துக் கொள்கிறார்! 

ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் கணவர் இறந்தால் மனைவிக்கு வெள்ளைப் புடவை தந்து சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் இப்ப அந்த பெண்ணே அடுத்த தலைமுறைக்கு தாலி எடுத்து கொடுக்கும் அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் பெண் வயதுக்கு வந்தா குடிசை கட்டி ஊர் முழுவதும் பத்திரிகை வைத்து அந்த பெண்ணை காட்சிப் படுத்துவார்கள் ஆனால் இப்ப பல தனவந்தர்கள் அப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று கூட நினைக்க மறுக்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் பழனியம்மாள் பள்ளியில் பத்தாவது படித்தால் போதும் என்று 17 வயதில் திருமணம் செய்து விடுவார்கள் ஆனால் இப்ப பெண்ணை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி கை நிறைய சம்பளம் வாங்கி சந்தோஷம் படுகிறார்கள். 

ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் திருமண நிகழ்வுகளில் பெண்ணை தரையில் அமர வைத்து ஆண்களுக்கு பென்ஞ்ச் போட்டு உட்கார வைப்பார்கள் ஆனால் இப்ப பெண்களை முன் வரிசையில் அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் தாழ்த்தப்பட்டோரை சாதி பெயரைச் சொல்லி அழைப்பார்கள் ஆனால் இப்ப பெயரைச் சொல்லி அழகாக அழைக்கிறார்கள்.


 ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் ஆடு மாடு செத்தால் காலனி ஆட்களை அழைத்து தூக்கி கொண்டு போய் உணவாக உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். விஞ்ஞானம் அறிவியல் மனித நேயம் கற்றதனால் இப்ப அது அவர்கள் உடம்புக்கு ஆகாது என்று குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். 


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் நவீன உடை அலங்காரம் போட்டால் கண்ட படி ஆண்கள் வார்த்தை பேசுவார்கள். ஆனால் இப்ப Tattoo போட மெகந்தி வரைய பெற்றோர்களே அழைத்து போய் அழகு நிலையத்தில் காத்திருந்து வெளியே வந்த பெண்ணை ரசித்து கூட்டி வருகிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

ஆண் மனைவியை இழந்தால் உடனே திருமணம் ஆனால் பெண் காலம் முழுவதும் விதவைக் கோலத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். காலம் மாற தனது மகனுக்கு இரண்டாம் தாரமாக பெண் தேடுகிறார்கள். 


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் பேருந்தில் தேநீர் கடைகளில் சரிசமமாக நடத்த மாட்டார்கள். 

ஆனால் இப்ப இரட்டை டம்ளர் இல்லாமல் ஒழித்து விட்டார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

(கோபிசெட்டிபாளையம் மருத்துவர் சு. விஜயகுமார் அவர்களின் பதிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...