பயணப் பயனாளிகளின் நாயகன் கலைஞர்
வாசித்த நாள் : 15.12. 2020
ஒரு அம்மா தன் பிறந்த குழந்தை பேசவே இல்லையேன்னு பல தவங்கள் செஞ்சு, நிறையக் கஷ்டப்பட்டு பேச வச்சாங்களாம். அந்தக் குழந்தைக்கு பேச்சு வந்த உடனே எப்பம்மா நீ தாலி அறுப்பேன்னு கேட்டுச்சாம். அதுபோல கலைஞரால், இலவச பஸ் பாஸ்ல ஸ்கூல் போயிட்டு, பர்ஸ்ட் கிராஜுவேட்ல காலேஜ் முடிச்சு வேலைக்குப் போயி நாலு காச பார்த்த சிலர் சோசியல் மீடியாவுக்கு வந்த உடன் கலைஞர் டிக்கெட் எடுக்காம ட்ரெயின்ல வந்தாராம்ல என ேபாகிற போக்கில் பொத்தாம் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் கலைஞர் அவர்கள் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்று உளறிக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது.
தமிழ்நாட்டில் பெரு முதலாளிகளிடம் மட்டும் இருந்த பேருந்துகளை பல எதிர்ப்புகளையும் மீறி அரசுடமையாக்கியவர் கலைஞர். அவர்கள் லாபமில்லா ரூட்களில் பேருந்துகளை இயக்க மாட்டார்கள். ஊழியர்களுக்கு சரி நிகர் ஊதியம், பணிப்பாதுகாப்பு இருக்காது. பேருந்து கட்டண நிர்ணயம் அவர்கள் கைகளில்.
ஆனால் அவர்களிடம் இருந்த பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்ட உடன் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிட்டியது. பேருந்து வசதி இல்லா ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. சமூக /பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏராளமான குடும்பத்து இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து அக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. (தனியார் பெரு முதலாளிகள் அப்போது ஜாதி பார்த்துத்தான் வேலை கொடுப்பார்கள்).
பின் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், முதியோர் பாஸ், நலிந்த நாடகக் கலைஞர்களுக்கான கன்செசன், கல்லூரி மாணவர்களுக்கான கன்செசன், உழவர் சந்தைக்கு காய் ஏற்றி வர கன்செசன் என ஏராள நலத்திட்டங்கள் செய்ய முடிந்தது.
இதனால் பேருந்து வைத்து அந்தந்த ஏரியாவில் மோனோபோலியாக இருந்த பல முதலாளிகளின் கோபத்திற்கு திமுக ஆளானது.
இன்று வரை அம்முதலாளிகள் அவர்கள் குடும்பம் எல்லாம் திமுக எதிர்ப்பு நிலையில் தான் உள்ளார்கள்.
இப்போது கலைஞர் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்று சொல்பவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களில் யாராவது ஒருவரோ கலைஞரின் இந்த பேருந்து அரசுடமையாக்கத்தால் பலன் பெற்றிருப்பார்கள்.
ஆம் தமிழ்நாட்டில் பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகம் உருவாக்கபட்டு பல கிராமங்களும் நகரங்களுடன் இணைக்கபட்டு விட்டன. எந்த ஆண்டு? 1972. அப்போது யார் முதல்வர்? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
2008 ஆம் ஆண்டில் கூட குஜராத்தில், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு டவுன் பேருந்துகள் இல்லை. உள்ளூர் மக்களால் தயாரிக்கபட்ட புல்லட் எஞ்சின் கொண்ட சிறிய வாகனங்கள் தான் மக்கள் பயன்படுத்தினர்.
ஆனால் நகரங்கள் மிகவும் எழிலாக ஆடம்பரமாக இருக்கும். அப்படியே தலைகீழாக கிராமங்கள்.
அப்போது அந்த மாநில முதலமைச்சராக இருந்தவரை ஊடகங்கள் நம் வளர்ச்சியின் நாயகன் என்று கூறின. அப்படி ஏற்றி விட்டு அவர் இன்று பிரதமர்.
ஆனால் இன்று ?
Transport Ministryயில் தொடர் ஊழல், தரமற்ற பராமரிப்பு, யூனியன் என்ற பெயரில் வேலை செய்யாமல் சுற்றும் ஊழியர்கள், முறையற்ற நிர்வாகம் & அலட்சியபோக்கு என்று தரம் தாழ்ந்து போனது. இன்று Omni Bus முதலாளிகள் நினைப்பதைத்தான் அரசு செய்து வருகிறது.
90களில் மட்டமான சேவை அளித்த KSRTC இன்று தரமான சேவை, புதியபேருந்துகள், சிறந்த நிர்வாகம் என்று பாய்ச்சல் காட்டுகிறது.
நமது SETC அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாமல்,திவாலாகும் நிலைமையில் உள்ளது.
இப்படியாக ஆரம்பம் நன்றாக இருந்தாலும் accountability & sustainability இல்லாமல் நாம் உடைத்த furnitureகள் பல.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளுடன், சரியான SOPயை அரசு வழங்கிவிட்டு operationஐ தனியாரிடம் கொடுக்கும் நிலை better என்று நினைக்கும் நிலையில் நாம் உள்ளோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக