ஞாயிறு, 15 மார்ச், 2026

இதுதான் கடைசி தேர்தலா ?

இதுதான் கடைசி தேர்தலா ?


அனேகமாக இதுதான் நாம் சந்திக்கும் கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே சட்டம் என்று ஒற்றைக் குடையின் கீழ் ஒற்றை ஆட்சி எனும் யூத ஜியோனிசக் கொள்கையை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


நாட்டின் மொத்தமுள்ள 28 மாநிலங்களில்  பாஜக தனியாக 14 மாநிலங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் (TDP, JD(U), NPP, SKM போன்றவை ) 5-ன் மூலமும் பாஜகவே ஆட்சி செய்கிறது. 

மீதமுள்ள 9 மாநிலங்களில் INC, DMK, AITC, AAP, LDF, ZPM போன்ற எதிர்க்கட்சிகள்/கூட்டணிகள் ஆட்சி செய்கின்றன.

இப்பொழுது 2026 -ல் அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி என 4 மாநில, 1 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.


இந்த ஐந்தில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் இம்மூன்றும்தான் பாஜகவை திணற வைக்கும் நிலையில் உள்ள மாநிலங்கள்.

 கேரளா வைப் பொறுத்தவரை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனை போட்டி யில் உள்ளது. 

அதையே சாதகமாக்கி பாஜக வளரும். MLA க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கூடப் பிடிக்கலாம்.

 மேற்கு வங்கத்தில் SIR மூலம் 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

அங்கு திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என நான்கு முனைப் போட்டி நடக்கிறது. 

இதுவும் பாஜகவின் பிளான்தான். 

இது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்.


தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவை கைப்பற்றி விட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் திமுக கூட்டணிக்குள் சென்று விட்டன.

இங்கு பாஜக கூட்டணியில் face value உள்ள பிரமுகர்கள் என யாரும் இல்லை. 

மேலும் இந்தக் கூட்டணியால் அதிமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான லாபம் இல்லை, சொல்லித்தக்க அளவில் ஓட்டு வங்கி எதுவும் இல்லாத பாஜகவுக்குத்தான் லாபம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதற்காகவே பல வருடங்களாக பாஜக நீண்ட கால திட்டத்தை வகுத்து அதன்படி ரஜினியை முயற்சித்தார்கள். 

அவர் உடல்நிலையை காட்டி ஒதுங்க, சீமான், கமலஹாசன், விஜய் என அடுத்தடுத்து களமிறக்கப்பட்டார்கள்.

சீமானால் பெரிதாக லாபமில்லையென்றாலும் ஓட்டுப் பிரிக்க உதவுகிறார். 

கமலஹாசன் திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

அடுத்து களமிறக்கப்பட்ட *விஜய்* க்கு அவரின் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்த பாஜக அவரை சரியாக உபயோகப்படுத்தியே வருகிறது

அவர் கமலஹாசனைப் போல் பாஜகவுக்கு எதிராகவோ அல்லது தனியாகவோ போய் விடக் கூடாது என்பதற்காக, 

கிடைத்த கரூர் சம்பவத்தையும், ஜனநாயகன் பட வெளியீட்டில் தொந்தரவு, மனைவியின் விவாகரத்து விவகாரம், த்ரிஷா விவகாரம், CBI விசாரணை என அடுத்தடுத்து செக் வைத்து மிரட்டி கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தாரை பணயக் கைதிகள் போல் வைத்துக் கொண்டு தொழிற்சங்க தலைவரை மிரட்டி, தொழிற்சாலை முதலாளி ஊழியர்களின் சம்பள ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் காட்சிகள் தமிழ் சினிமாவில் பல உண்டு.

அதைத்தான் பாஜக விஜய்யிடம் செய்து கொண்டிருக்கிறது.

 விஜய் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டால் துணை முதல்வர் / முதல்வர் பதவி என ஆசை காட்டப்படுகிறது.

 இல்லையேல் வழக்கு, தண்டனை என்பதோடு அவர் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும்.

அப்படி ஒத்துக் கொண்டால் திமுக Vs பாஜக கூட்டணிகள் மோதும். 


சிறுபான்மையினர் ஓட்டு பாஜக கூட்டணிக்கு கிடைக்காது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும்

அதற்காக அது வருந்துவதில்லை. அதை எதிர்பார்ப்பதுமில்லை.

ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் இந்து கட்சியான பாஜகவை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறார்கள். ஆகவே இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்ற ஒற்றைக் கோஷத்துடன் பெரும்பான்மை இந்துக்களின் குறிப்பிடத்தக்க சதவீத ஓட்டுக்களை பாஜக தனக்கு அறுவடை செய்து கொள்ளும். 

இந்த ஃபார்முலாவில்தான் ஆந்திராவிலும், பல வட மாநிலங்களிலும் பாஜக ஜெயித்தது.

போதாக்குறைக்கு உவைசி போன்ற பாஜகவின் B டீம் ஆட்களே சிறுபான்மை வாக்குக்களைப் பிரித்து பாஜக கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்.

இதைச் சொல்லித்தான் பாஜக, எடப்பாடி மற்றும் விஜய்யிடம் சமாதானம் சொல்லியிருக்கிறது.

போட்டி எப்படி இருந்தாலும் " மிகவும் டஃப்பாக இருக்கிறது " என்ற கருத்து பரவலாக மீடியாக்கள் மூலம் தூவப்படும். 

 மக்கள் மனங்களில் அந்த எண்ணம் ஆழ விதைக்கப்படும்.

மேற்கொண்டு நடக்க வேண்டியதை EVM பார்த்துக் கொள்ளும்.

திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை பாஜக உருவாக்கும். சில கட்சிகள் தனித்து பிரிந்து கூட போகலாம்.

திமுக வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகு திமுக கட்சிக்குள்ளேயும் பாஜக சலசலப்பை ஏற்படுத்தும்.

பழைய ஆட்களுக்கே தொடர்ந்து சீட் கொடுத்தால் இளைய தலைமுறையினரும், புதிய இளைஞர்களுக்கு சீட் கொடுத்தால் பெருசுகளும் கோபித்துக் கொள்வர். 

அவர்கள் கோபம் களத்தில் தெரியும். தேர்தல் முடிவுகளிலும் தெரியும். 

கூட்டணிக்குள்ளேயே உட்பூசல்கள் இருக்கும்.

இவற்றைத்தான் பாஜக எதிர்பார்த்து காய் நகர்த்துகிறது.

அவர்கள் நோக்கம் வெல்வதல்ல, மாறாக எதிர்பார்ப்பது ஒவ்வொரு தொகுதியிலும் இழுபறி இருப்பது போல் ஒரு பிம்பம் .

அந்த செயற்கை பிம்பத்தில் தேர்தல் நடக்க EVM அவர்களுக்கு உதவும்.

சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அமையாமல் இழுபறி நிலையை உருவாக்கும்..

அந்த நிலையில் திமுக கூட்டணிக்குள் இருக்கும் பல MLA க்களை தன் சகல பலத்தாலும் மொத்த விலைக்கு பாஜக வாங்கி விடும். 

பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். முதல்வர், துணை முதல்வர் என்ற பதவிக் கனவுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் எடப்பாடி, விஜய் இருவரையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு பாஜகவைச் சார்ந்தவர் முதல்வராவார்.

தன்னுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் MLA க்களும் பாஜகவுக்கு குழுவாக தாவுவார்கள்.

அதிமுகவும், தவெகவும் இத்தோடு அழிந்து காணாமல் போய் விடும்.

59 வருட திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு தமிழ்நாட்டு மண்ணில் பாஜக வலுவாக கால் ஊன்றிக் கொண்டு தன் இந்துத்துவா கொள்கைகளை எவ்வித தயக்கமும், சமரசமும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும்

இதை பாஜக செய்யாது என்று எண்ண வேண்டாம்

தன் கொள்கையோடு ஒத்து இயங்கிய சிவசேனாவை உடைத்து பிரித்தது பாஜக.

45 வருட அரசியல் அனுபவம் கொண்ட பல முறை பீகார் முதல்வராக இருந்த, தற்போதும் தன் கூட்டணியில் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாரை இறக்கி விட்டு பீகாரில் பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

பாஜக நாகரீக அரசியல் எல்லாம் செய்யாது

இந்த நிலையில் எடப்பாடி, விஜய் எல்லாம் பாஜகவுக்கு வெறும சுண்டைக்காய். 

வென்றாலும், தோற்றாலும் எடப்பாடி & விஜய் இவர்களைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் வாழ்க்கைகள் முடிக்கப்பட்டு விடும்.

விஜய் மீண்டும் சினிமாவுக்கு போய் விடுவார்

எடப்பாடி பாஜகவில் சேர்ந்து விடுவார்

காங்கிரஸ் அகில இந்திய அளவில் ஏற்கனவே அஸ்தமனமாகி விட்டது

தமிழ்நாட்டில் மிச்சம் இருக்கும் கம்யூனிஸ்ட் போன்ற உதிரிக் கட்சிகளும் பெயரளவில் இயங்கும், சில காணாமல் போகும். சில பாஜகவோடு கலந்து கரைந்து போகும்.


மீதமிருக்கிற திமுகவும் பல வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டு முடக்கப்படும் .


குரல் கொடுக்கக் கூட் முடியாத முடியாட்சியைப் போன்ற சர்வாதிகார ஆட்சி அமுலாகும் .  

அப்போது தேசம் முழுவதும் பாஜகவின் கைகளுக்குள் வந்து சேர்ந்திருக்கும்

அதன் பிறகு 

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அதிபர், ஒரே சட்டம்தான்

இவை அனைத்தும் நடக்கும் என்பது ஒரு கணிப்புதான் .

ஆனால் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அதனால்தான் சொல்கிறோம்

இதுதான் இந்தியா காணப் போகும் கடைசித் தேர்தலாகக் கூட இருக்கலாம்.


ப.பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...