செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 2

இந்திய பாசிச வரலாறு பாகம் 2
கீர்த்தனா ராம்




1942 ல் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்த போது முதலில் சுதந்திரம் பின்னர் பிரிவினை என்றார் காந்தி.
இதற்கு மாறாக ராசகோபாலு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தனியாக பிரிக்க ஜின்னாவுக்கு ஐடியா கொடுத்தார். இதை கடுமையாக எதிர்த்தார் காமராஜர்

இறுதியில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது காந்தியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல். 1.5 கோடி மக்கள் நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றி மாற்றி துரத்தி அடிக்க பட்டார்கள் 10 லட்சம் பேர் கலவரங்களில் மரணமடைந்தார்கள் காணாமல் போனார்கள் கல்கத்தாவில் மட்டும் நாலாயிரம் பேர் இறந்திருந்தனர்

ராசகோபாலு பார்முலா இந்தியாவை சின்னா பின்னப் படுத்தியது என்றால் காமராஜரின் கே பிளான் இந்தியாவை வல்லரசு ஆக்க தீட்டப்பட்டது.
அதன்படி ஒருவருக்கு இரு பொறுப்பு இனி கிடையாது என்றார். பத்து ஆண்டுகள் ஒரே பதவியில் தொடர்வது, நல்லது அல்ல என்றார். சுதந்திரம் அடைய உருவாக்கப்பட்டது காங்கிரஸ்

அதன் தேவை முடிந்து விட்டது காங்கிரசை கலைத்து விடலாம் என்றது ராசகோபாலு குரூப். காமராஜர் திட்டத்தை ஏற்ற நேருவின் கட்டளை படி மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.


காமராஜர் திட்டத்தை நேரு உறுதியாக ஏற்க 1962 இல் சீனாவில் வாங்கிய அடியும் ஒரு காரணம். சீன யுத்தம் எதிரியை மட்டும் இல்ல கட்சியில் இருந்த துரோகிகளையும் களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நேருவுக்கு உண்டாக்கி இருந்தது. யாருமே எதிர்பார்க்காத நிலையில் நேரு 1964 இல் மரணம் அடைந்தார்

நேரு மறைவுக்குப் பின் காங்கிரசில் இருந்த நூலிபான்கள் ஒன்று கூடி மொரார்ஜி தேசாயை பிரதமராக்க முயன்றனர். தீவிர வலது சரியான தேசாயை விலக்கி நேரு நம்பிக்கை பெற்ற சாஸ்திரியை முன்மொழிந்தார் காமராஜர். காமராஜரின் அதிரடிகளால் ராசகோவலுகுரூப் கட்சியை விட்டு விலகியதால் சாஸ்திரி பிரதமரானார்

எதிர் பார்த்தபடி சாஸ்திரி நேருவின் சமதர்ம லட்சியப்படி வெண்மை புரட்சி உள்ளிட்ட சாதனைகளை புரிந்து கொண்டிருந்தபோது 1965இல் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், 1966 இல் அன்றைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஸ்கண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மர்மமாக மரணமடைந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

மீண்டும் காங்கிரசில் இருந்த நூலிபான்கள் கூடி மொரார்ஜி தேசாயை சுற்றி நின்று கும்மி அடித்தனர். இம்முறை காமராஜர் இந்திராவை முன்மொழிந்தார். அதற்கு முக்கிய காரணம்
1) மொரார்ஜி மனித மூத்திரப்பிரியர்

2) இந்திரா தன் தந்தை நேரு உடன் பல வெளிநாடுகளுக்கும் சென்று அந்நாட்டு அதிபர்களிடம் பரிட்சயம் செய்திருந்தார் 3)நேருவின் வெற்றிடத்தை அப்போ இருந்த நூலிபான் எவராலும் நிரப்ப முடியாது 4) காங்கிரஸ் கட்சி கேரளம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அடிவாங்கிக் கொண்டிருந்தது

அதற்கு காமராஜரே பிரதமர் ஆகி இருக்கலாமே? கலைஞர் சொன்னது தான், பல நூலிபான்களை விட உயரமாக இருந்தாலும், காமராஜரை ரொம்ப நாள் விட்டு வைக்க மாட்டார்கள். காங்கிரஸில் நூலிபான்கள் சம்பவம் செய்யப்படுவதை கண்டு கடுப்பான ஆர் எஸ் எஸ் அவரை வீட்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொள்ள முயன்றது

ராஜகோபாலு குரூப் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவருக்கு எதிராக அல்லு சில்லு வேலைகளை செய்து கொண்டிருந்தது. பதவியில் இருந்து சாதிக்க முடியாததை கட்சி பொறுப்பிலிருந்து சாதிக்க எண்ணி இருக்கலாம் எதிர்த்துப் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் தோற்கடிக்கப்பட்டு, இந்திரா பிரதமர் ஆக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...