செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 1

இந்திய பாசிச வரலாறு பாகம் 1
கீர்த்தனா ராம்




இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.
தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி

காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள் கூடவே சில நூலிபான்களும்

சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம்
வடக்கே மதன் மோகன் மாளவியா,
மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது. தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
மிக மிக கேவலமாக இருப்பதைக் கண்டு, வருந்தி முதலில் தாய் நாட்டை கவனிப்போம் என்று காங்கிரசில் இணைந்தார்.
அதுவரை நூலிபான்களின் ஏகபோக உடமையாக இருந்த காங்கிரஸ் பொதுமக்களின் இயக்கமாக மாற ஆரம்பித்தது. ஏற்கனவே கடுப்பில் இருந்த சில குடுமிகள் தங்கள் இஷ்டப்படி காங்கிரஸ் ஆடாது என உணர்ந்தனர்

ஆங்கிலம் பயிற்று மொழி ஆக்கப்பட்டு அடித்தட்டு மக்கள் ஓரளவு கற்க ஆரம்பித்தனர். இதனால் தங்கள் ஆச்சார அனுஷ்டான சனாதான தர்மத்தைப் பேணி காக்க இந்து மகா சபாவை துவக்கினார் மதன்மோகன் மாளவியா என்ற குடுமி. அதற்கு பனாரஸ் ஹிந்து பல்கலை உருவாக்கி சமஸ்கிருதம் வழியாக ஹிந்துத்துவா புகுத்தப்பட்டது

காங்கிரஸ் கட்சி காந்தி தலைமையின் கீழ் வந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக், twitter இல்லாத அந்தக் காலத்திலேயே சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து காந்தி விடுக்கும் போராட்டக் கோரிக்கைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அருணாச்சல் பிரதேசம் வரை பரவியது
காங்கிரஸ் மெதுவாக வெகு மக்கள் இயக்கமாக அதன் போராட்டங்கள் வெகுமக்கள் எழுச்சியாக பரிணமித்துக் கொண்டிருந்தன. ஆங்கில அரசு பயந்தது. காங்கிரசில் இருந்த பச்சை சங்கிகளையும், காவி சங்கிகளையும் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தது. ஹிந்து மகாசபா உருவாகும் முன்பே முஸ்லிம் லீக் உருவாகிவிட்டது
நவாப் சலீமுல்லாவில் ஆரம்பித்து ஜின்னா வரை காங்கிரஸ் இந்துக்களுக்கான கட்சி என நம்ப ஆரம்பித்து இருந்தனர். அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வி டி சாவர்க்கர், மதன்மோகன் மாலவியா உருவாக்கி இருந்த தீவிரவாத பள்ளிக்கு வந்து சேர்ந்தார். ஹிந்துத்துவா வெறி அதிகமானது

முஸ்லிம்களின் தனி நாடு கோரிக்கைக்கு பதிலடியாக அகண்ட பாரதம் முன்வைக்கப்பட்டது. துருக்கி கலீபாவுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்தார். முஸ்லிம்களை தங்களுடன் பிணைத்திருக்கும் என்று அவர் எண்ணியதற்கு மாறாக ஹிந்துக்கள் இடையே அவர் முஸ்லிம்களின் ஆதரவாளர் என்று பரப்பப்பட்டது.

காந்தி ஆரம்பித்த போராட்டங்களை, கண்டுக்காத ஹிந்து மகாசபா அம்பேத்கரின் இரட்டை தொகுதி முறைக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்த போது அவருடன் தோளோடு தோள் நின்றது. காந்தியின் அகிம்சையில் முரண்பட்ட நேதாஜி பிரிட்டிசாரை விரட்ட ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தினார்

இடையில் ஹெட்கோவர் தலைமையில் தலைமையில் ஒரு குரூப் ஹிந்து மகா சபாவில் இருந்து பிரிந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்தது. ஆர் எஸ் எஸ் & ஹிந்து மகாசபா நேதாஜி கூட்டத்தை போட்டுக் கொடுத்து ஆங்கிலேயரிடம் விசுவாசத்தை காட்டி கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவில் செமத்த அடி வாங்கிய அந்தக் காலப் பெரிய அண்ணன் இங்கிலாந்து, கட்டுப்பாட்டில் இருந்த காலனிகளை வைத்து மேய்க்க முடியாமல் அவற்றை கை கழுவ முடிவு செய்தது.
ஜின்னா முறுக்க ஆரம்பித்தார் பாகிஸ்தான் தராமல் இந்தியாவை சுதந்திரம் பெற விட மாட்டோம் என்றார். காங்கிரசில் இருந்த மென் சங்கிகள், பதவி ஆசையில் மவுண்ட் பேட்டன் திட்டத்திற்கு சம்மதித்து, இந்தியாவை கூறு போட நாள் குறித்தனர்.
காந்தி எக்கெடோ கெட்டு தொலைங்கடா என்று ஒதுங்கி கொண்டார். ஒன்றரக் கலந்திருந்த இரு சமுகத்தை எப்படி பிரிப்பது? நம்ம ஊரு ராசகோபாலு ஐடியா படி, மேற்கு பஞ்சாப் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு என்று முடிவானது

தகவல் பரவியதும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் கலவரம் வெடித்தது. கராச்சி, ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வழியாக வந்த அனைத்து ரயில்களும் பினங்களை சுமந்து கொண்டு வந்தன. பதிலுக்கு கல்கத்தா மாநகரம் பற்றி எரிய ஆரம்பித்தது. காந்தி நவகாளி சென்று கலவரத்தை நிறுத்த உண்ணாவிரதம் ஆரம்பித்தார்

கலவரம் கட்டுக்குள் வந்தது. ஆனால், காந்தி தனது உணவான சில வேர்க்கடலைகள் மற்றும் ஆட்டு பாலை தொடர்ந்து உண்ண மறுத்தார்.
நேருவும் அயன் மேனும் ஏரோப்ளேன் எடுத்துக் கொண்டு கல்கத்தா விரைந்தனர். பாகிஸ்தான் தனி நாடாக போனபோது அதுக்குன்னு சொந்தமா ஒரு துப்பாக்கி கூட இல்லை. நம்பிபோன மக்களுக்கு சோறு போட ஒரு உழக்கு கோதுமை கூட இல்லை.
பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய பங்கையும் தொகையையும் உடனடியாக கொடுத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று கறாராகச் சொல்லிவிட்டார் காந்தி.
அகண்ட பாரத கனவில் இருந்த ஹிந்து மகா சபாவிலும் ஆர் எஸ் எஸ் சிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட நூலிபானுக்கு பேரிடியாக இறங்கியது.

இரண்டு தேசமும், எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது அவரவர் பொழப்பை பார்ப்போம் என்று எண்ணிய போது இந்த சைக்கோ, நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் காரணம் காந்தி என போதிக்கப்பட்டு, அந்தக் கால அம்பானி பிர்லா வீட்டில் தங்கி இருந்த காந்தியை போட்டு தள்ளிய நாள் இன்று ஜனவரி 30.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...