வியாழன், 28 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடு முதல்வர்களின் போராட்ட வரலாறுகள்

தமிழ்நாடு முதல்வர்களின் போராட்ட வரலாறுகள்



ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான், இந்த அமெரிக்க மாப்பிள்ளை, தம்பி, மச்சான்னுல்லாம் கேரக்டர் பண்ண மாட்டீங்களா ?


இல்ல சார்.  

நடிச்சா ஹீரோவாத்தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சூப்பர் ஸ்டார், அரசியல், சி எம் பதவின்னு போறதுதான் என் இலட்சியம்.


மேற்கண்ட உரையாடல் காதல் திரைப்படத்தில் வந்த பிரபலமானக் காட்சி.


தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்தான் அந்த ஸ்ட்ரெய்ட்டா சி.எம்தான் கேரக்டர்.


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றியாத அந்தத் தற்குறி கூட்டத்துக்காகச் சில தரவுகள் 


தமிழ்நாட்டில் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில் ஒரே ஒருவர் கூட ஸ்ட்ரெய்ட்டா C M ஆனவர்கள் எவருமில்லை.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக ஆன சிலரைக் காண்போம்.


1.) காமராசர்

2.) அண்ணா

3.) கலைஞர்

4.) எம் ஜி ஆர்

5.) ஜெயலலிதா

6.) ஸ்டாலின்


இந்தப் பட்டியலில் இராஜகோபால், பக்தவச்சலம், ஜானகி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றோரெல்லாம் வர மாட்டார்கள். காரணம் அவர்களெல்லாம் நியமன முதலமைச்சர்கள். அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.  


நிற்க.


காமராஜர் திடுக்கென முதலமைச்சர் ஆனவர் இல்லை. முப்பது வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, கடுமையான களப்பணிகளைச் செய்து, பல தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகளைச் சந்தித்து படிப்படியாக மேலேறி சிகரத்தை அடைந்தவர் !


அண்ணாவின் அரசியல் வரலாறு, காமராசருக்கு நிகரானது. தேர்தல் அரசியலல்லாது சமூகசேவை இயக்கங்களில் களப்பணி ஆற்றியவர்.  

தினமும் எழுதினார். தினமும் பொதுக்கூட்டங்களில் பேசினார். சாலை வசதி, வாகனப்போக்குவரத்து குறைந்திருந்த அந்தக் காலத்திலும் தினமொரு ஊருக்கு சொற்பொழிவாற்ற பயணித்தவண்ணமிருந்தார்.  


இந்தி எதிர்ப்பு போராட்டக் களங்களில் நேரடியாக இறங்கி, பெரியாரோடு கொடுஞ்சிறைகள் கண்டவர் அண்ணா !


திமுகவை ஆரம்பித்தவுடன் தேர்தல் அரசியலுக்குள் குதித்துவிடவில்லை அண்ணா.


பின்னொரு நாளில் குதித்தாலும் உடனே நேரடியாக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து முதலமைச்சர் ஆசை கொண்டதில்லை.


சென்னை மாநகராட்சி, இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி அதிகாரங்களைத்தான் முதலில் திமுக கைப்பற்றியது. கட்சி ஆரம்பித்து எட்டு வருடங்களுக்குப் பின்தான்(1957) முதல் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக போட்டியிட்டது. அன்றிருந்த அனைத்து தொகுதியிலெல்லாம் போட்டியிடவில்லை. 50 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, திறமையானவர்களை அவற்றில் போட்டியிடச் செய்தார் அண்ணா !


அண்ணா தலைமையிலான திமுக கட்சி, தான் பங்கெடுத்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளை வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். கலைஞரும் அதிலிருந்தார். அண்ணாவின் சட்டமனறப் பேச்சுக்களும், கேள்விகளும், வாதங்களும்தான் தமிழ்நாட்டு மக்களை பெரிதும் ஈர்த்தன.


1962 ல் திமுக எதிர்கட்சி.


1967 ல் ஆளுங்கட்சி.  


கணக்கு போட்டால் 18 வருடங்கள் கழித்தே அண்ணாவுக்கு முதலமைச்சர் பதவியை மக்கள் பரிசளித்திருக்கின்றனர் என்கிறது வரலாறு !


அதன் பின் கலைஞர்.  


நெடுஞ்செழியனின் முதுகில் குத்தி, எம்ஜிஆரை கைக்குள் போட்டுக் கொண்டு கலைஞர் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பார்கள் வவுத்தெரிச்சல் மிக்க துக்ளக் சோக்கள். 


உண்மையில் 1962 ல் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை விஞ்சி மக்களை பெரிதும் ஈர்த்தவராக சட்டமன்றத்தில் செயல்பட்டிருந்தார் கலைஞர். அண்ணா தோற்றிருந்த அந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கட்சி உடைந்திருந்தது. இருந்தும் கட்சியைச் சிதறவிடாமல் கட்டிக் காத்த சாதுர்யம் கலைஞரிடத்தில் இருந்தது. அந்தத் தகுதிகள்தான் அவருக்கு 1969 ல் முதலமைச்சர் பதவியைத் தந்தனவே அன்றி ஆரிய காண்டுகள் சொல்வது போல் அல்ல.


ஆனால் 1971 ல், கலைஞர்தான் முதலமைச்சர் என்று சொல்லி குதித்த தேர்தலில், எந்தக் கட்சியும் அதுவரை கண்டிராத வெற்றியை ;


திமுக இதுவரை கூட கண்டிராத வெற்றியை கலைஞர் அன்று பெற்றார்.  


அந்த ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த எண்ணிலடங்கா நலத்திட்டங்கள் உலகளவில் புகழ்பெற்றவை !


கலைஞர் முதலமைச்சர் ஆக இருபது வருடங்கள் பிடித்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களிடையே 1949 லியே பெரும்புகழ் பெற்றவர். 1952 ல் பராசக்திக்கு அவர் எழுதிய வேளையில், சிவாஜியை நிராகரிக்கத் துடித்த மெய்யப்பச் செட்டியாரிடமே சிவாஜிக்குத்தான் எழுதுவேன் என்று பிடிவாதம் காட்டி, சிவாஜியை நீடிக்கச் செய்யுமளவு வல்லமை மிக்கவர் (இதற்கு முன்பே நாயகர்கள் நடுங்கும் தயாரிப்பாளரான டி ஆர் சுந்தரத்திடமும் வாதிட்டு எம் ஜி ஆருக்கு கதாநாயகன் வாய்ப்புகளை தக்க வைத்துக் காத்தவர் கலைஞர்)

மலைக்கள்ளன் படத்தில் எடுத்தவுடன் திரையில் ஹீரோ பெயரோ, தயாரிப்பாளர் பெயரோ, இயக்குனர் பெயரோ வராமல் உரையாடல் எழுதிய கலைஞர் பெயரைத்தான் முதலில் காட்டினார்கள்.  


மனோகரா, பூம்புகார் எல்லாம் கலைஞரின் உரையாடலுக்காகவே ஓடிய படங்கள்.  


திரைக்கதை & உரையாடல் எழுதுவதில் இந்தளவு மக்கள் மனத்தைக் கொள்ளையடித்தவராக ஒரு கழகத் தலைவர் கூட அன்றில்லை.  


இத்தனைக்கும் அன்று சினிமாவில் திராவிட இயக்கங்களைச் சார்ந்த பல தலைவர்கள் (அண்ணா உட்பட) இருந்தும், கலைஞர்தான் அதில் பெருவல்லவர். பிரமிக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியவர். அப்படி இருந்துமே அவர் முதலமைச்சராக இருபது வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குள் மும்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்திலும் வென்று சட்டமன்ற உறுப்பினாரகத் தொடர்ந்தவர் கலைஞர்.


சரி. எம் ஜி ஆர் 1972 ல் கட்சியை ஆரம்பித்தார். 1977 ல் முதலமைச்சர் ஆகிட்டார்ல்ல ?


அட கேக்கூக்களா ?


அவர் திமுகவுக்காக எத்தனை வருடங்கள் உழைத்தவர், எத்தனை பரப்புரைகளில் கலந்துக் கொண்டவர், தன் படங்கள் அனைத்திலும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் கட்சியின் கொள்கைகளைச் செருகியவர், திமுகவில் கட்சிப் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையெல்லாம் எம் ஜி ஆர் வகித்தார் என்கிற வரலாற்றை வாசிக்க வேண்டாமா ?  


அந்த அடிப்படைதானே அவர் கட்சியைத் தொடங்கியதும் வெற்றிகளைத் தந்தன ?  


ஒரு வெற்றியா ?  


ஹாட்ரிக் வெற்றிகள்.  


எம் ஜி ஆர் இறந்ததும் மீண்டும் முதலமைச்சர் ஆனார் கலைஞர்.


இடைப்பட்டக் காலத்தில் கலைஞர் எவ்வளவு மோசமானத் தோல்விகளை சந்தித்தார் ?  


எப்படி தாங்கினார் ?  


எப்படி அவருடைய அவ்வளவு பெரிய கட்சி உடையாமல் நீடித்தது ?


அவைகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அற்புதமான பாடங்கள் தெரியுமா ?  


அதையெல்லாம் வாசிக்காமல், களத்தில் ஒன்றையும் புடுங்காமல், தோல்விக்கு அஞ்சி, ஸ்ட்ரெய்ட்டா சி எம் தான் என வரும் காமெடி பீஸ்களை என்னவென்று சொல்வதம்மா ?


ஜெயலலிதாவின் கதைகளும் உங்களுக்குத் தெரியும்.   

பத்து வருடங்களுக்கும் மேலாக கட்சியில் உழைத்துத்தான் மேலே வந்தார். பெருவெற்றி பெற்று உடனே பெருந்தோல்வியும் பெற்றார். ஆனால் மீண்டெழுந்தார். அரசியல் களம் என்பது இப்படியான மேடு பள்ளங்களைக் கொண்டதுதான். மண்டபத்தில் எவனோ எழுதித்தரும் அறிக்கைகளை மட்டுமே விட்டெல்லாம் தமிழ் மக்களை ஈர்த்துவிட முடியாது.  


கண்ணெதிரே அதற்கான சாட்சி ம நீ ம கமல்ஹாசன்.  


உழைப்புக்கஞ்சாத அவர் உள்ளே வந்த போதே எச்சரித்தேன். அவரைக்காட்டிலும் அவர் பின்னால் போன மூடர்கள் மீதுதான் கவலை எனக்கு. காலம் வெகுவிரைவில் யதார்த்தம் என்னவென்று அவர்களுக்கு உணர்த்திவிட்டது !


சரி. நாம் இறுதியாக பார்க்கவிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.


கலைஞருக்காவது கட்சிக்குள் வந்த இருபது வருடங்களுக்குள் முதலமைச்சர் ஆக முடிந்தது. ஆனால் டீனேஜிலேயே கட்சிக்குள் வந்த ஸ்டாலினுக்கு இருபது வருடங்கள் கழித்துத்தான் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பே கிட்டியது. கிட்டிய வெற்றியும் இரண்டு வருடங்கள் கூட நிலைக்கவில்லை. அடுத்த தேர்தலில் தோல்வி.  


இப்படி தொடர்ந்த இவருடைய அரசியல் பயணம்தான் பரமபத விளையாட்டைப் போல் ஆகி, முந்தா நேத்து மேயர், நேற்று எதிர்கட்சித்தலைவர், இன்று முதலமைச்சர் என்கிற ஏணியில் ஏற்றிவிட்டுள்ளது !


என்னதான் Paid Medias மூலம் நீங்கள் செயற்கையாக போலிப் பிம்பங்களை ஊதிப் பெருக்கி கட்டமைத்தாலும், மக்கள் தெளிவானவர்கள். ஆட்டுப்புழுக்கை கதி தெரியும்ல்ல ?  


அணில் புழுக்கை கதியும் தெரிந்துவிடும்.


அதுவரை கோமாளிகள் போடும் குட்டிக்கரணங்களை ரசிப்போம் !


உயிர்மை இதழுக்காக 01/07/2024 அன்று எழுதியவர் திரு. ராஜா ராஜேந்திரன்🙏




திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்


இதில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லவும்

பாஜக ஆதரவாளர்கள் அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில் பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?


19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது? 

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை. 
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர், வலுவானவர்.

பெரியார் செய்த மாற்றம் பற்றி MR இராதா

பெரியார் செய்த மாற்றம் பற்றி MR இராதா

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் மறைந்து விடுகிறார். சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. 


அன்றைய கல்வி அமைச்சர் நாவலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.


நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாவலர், ஏ.எஸ்.கே. ஆகியோர் ஆற்றிய உரைகள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவில் இருந்தன.


நடிகவேள் இவ்வாறு பேசினார்.


"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள் என்று உரையைத் தொடங்கியவர், 1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார். அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.


அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.

1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார். காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.


1940களில் பெரியார் வலம் வருகிறார். உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு, காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு பேச முடிந்தது. "இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது. இதை யார் வாங்கித்தந்தது?


அய்யா சாமி: டேய் வரேன்டா: ... 

சாமி : வரேன்டா 

அய்யரே : வாங்கிக்கப்பா


மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.


நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் அடையாளம்

தலைவர் கலைஞர் 
தமிழ்நாட்டின் அடையாளம்



முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தமிழுக்கு புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்


✅பாரிஸ் கார்னரை பாரிமுனை என மாற்றினார்


✅பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்


✅ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்


✅ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்


✅லேக் பகுதியை வள்ளுவர் கோட்டம் என மாற்றினார்


✅தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்


✅வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்


✅டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப்பூங்கா ஆக்கினார்


✅மவுண்ட் ரோடை அண்ணாசாலை என்று மாற்றம் செய்தார்


✅கடற்கரை சாலையின் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரை சூட்டினார்


✅கண்ணகி சிலை நிறுத்தம் என்கிறார் நடத்துநர்


✅காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்


✅குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தெற்கை அடையாளப்படுத்தினார் 


✅தமிழ்நாடெங்கும் பல நூறு மேம்பாலங்கள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு சுரங்கப்பாதைகள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு சமூக கூடங்கள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு உழவர் சந்தைகள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்


இதற்கிடையே குறளோவியம் படைக்கிறார்


பூம்புகார் படைக்கிறார்


தொல்காப்பிய பூங்கா படைக்கிறார்


ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சீமையிலே, பொன்னர் சங்கர்,

பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற சரித்திர நாவல்கள் ஒரு பக்கம்


அம்மையப்பன், ஒரே ரத்தம் போன்ற சமூக நாவல்கள் இன்னொரு பக்கம்


தினந்தோறும் உடன்பிறப்புக்கு கடிதம்


கரிகாலன் பதில்கள்


நாள் தவறா மேடைப்பேச்சுகள்


திருவிழா நாளெல்லாம் கவியரங்க ஊற்று


அமைச்சரவை பணிகள்


தொண்டர்களுக்கு அன்புக்கட்டளைகள்


கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி வியூகங்கள்


ஒருசேர கொள்கை முழக்கங்கள்


இவற்றின் இடையே 70 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம்


இத்தனைக்கும் இடையில் எதிர்க்கட்சிகளோடு மல்லு கட்டுதல்


சொந்த கட்சி தொண்டர்களை கட்டுக்கோப்பாக அரவணைத்து செல்லுதல்


சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்றார்


எந்த நாட்டு மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த நாட்டின் திருமறையாக மாறும் தன்மை கொண்ட திருக்குறளை படியுங்கள் என்றார்


80 ஆண்டுகள் பொதுவாழ்வு 


60 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதி 


50 ஆண்டுகள் கட்சித் தலைவர் 


20 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்


நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது


கலைஞர் தன் அரசியல் பயணத்தில்


தமிழ்நாட்டில் உருவாக்கிய அடையாளங்கள் ஏராளம்


இன்று தலைவர் கலைஞரே தமிழ்நாட்டின் அடையாளம்


KalaignarForever 🖤❤️🔥

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு விசித்திரமான வரலாறு

ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு
 விசித்திரமான வரலாறு 

இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின் மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2023 க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹36000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

சிவகங்கை

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...