தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் அடையாளம்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தமிழுக்கு புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்
✅பாரிஸ் கார்னரை பாரிமுனை என மாற்றினார்
✅பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்
✅ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்
✅ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்
✅லேக் பகுதியை வள்ளுவர் கோட்டம் என மாற்றினார்
✅தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்
✅வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்
✅டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப்பூங்கா ஆக்கினார்
✅மவுண்ட் ரோடை அண்ணாசாலை என்று மாற்றம் செய்தார்
✅கடற்கரை சாலையின் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரை சூட்டினார்
✅கண்ணகி சிலை நிறுத்தம் என்கிறார் நடத்துநர்
✅காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்
✅குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தெற்கை அடையாளப்படுத்தினார்
✅தமிழ்நாடெங்கும் பல நூறு மேம்பாலங்கள்
✅தமிழ்நாடெங்கும் பல நூறு சுரங்கப்பாதைகள்
✅தமிழ்நாடெங்கும் பல நூறு சமூக கூடங்கள்
✅தமிழ்நாடெங்கும் பல நூறு உழவர் சந்தைகள்
✅தமிழ்நாடெங்கும் பல நூறு பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்
இதற்கிடையே குறளோவியம் படைக்கிறார்
பூம்புகார் படைக்கிறார்
தொல்காப்பிய பூங்கா படைக்கிறார்
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சீமையிலே, பொன்னர் சங்கர்,
பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற சரித்திர நாவல்கள் ஒரு பக்கம்
அம்மையப்பன், ஒரே ரத்தம் போன்ற சமூக நாவல்கள் இன்னொரு பக்கம்
தினந்தோறும் உடன்பிறப்புக்கு கடிதம்
கரிகாலன் பதில்கள்
நாள் தவறா மேடைப்பேச்சுகள்
திருவிழா நாளெல்லாம் கவியரங்க ஊற்று
அமைச்சரவை பணிகள்
தொண்டர்களுக்கு அன்புக்கட்டளைகள்
கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி வியூகங்கள்
ஒருசேர கொள்கை முழக்கங்கள்
இவற்றின் இடையே 70 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம்
இத்தனைக்கும் இடையில் எதிர்க்கட்சிகளோடு மல்லு கட்டுதல்
சொந்த கட்சி தொண்டர்களை கட்டுக்கோப்பாக அரவணைத்து செல்லுதல்
சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்றார்
எந்த நாட்டு மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த நாட்டின் திருமறையாக மாறும் தன்மை கொண்ட திருக்குறளை படியுங்கள் என்றார்
80 ஆண்டுகள் பொதுவாழ்வு
60 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதி
50 ஆண்டுகள் கட்சித் தலைவர்
20 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்
நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது
கலைஞர் தன் அரசியல் பயணத்தில்
தமிழ்நாட்டில் உருவாக்கிய அடையாளங்கள் ஏராளம்
இன்று தலைவர் கலைஞரே தமிழ்நாட்டின் அடையாளம்
KalaignarForever 🖤❤️🔥

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக