தோஹா WTO மாநாட்டில்
முரசொலி மாறன்
தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர், கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார்.
பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு.
ஒரு மத்திய அமைச்சர் எத்தனை ஆழமாக தனது துறை சார்ந்த விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகிற்கே எடுத்துக்காட்டு முரசொலி மாறன்.
பல துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தனி ஆளாக படித்து, திருத்தங்கள் செய்து அசத்தினார்
அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தோஹா மாநாட்டுக்கு இந்தியக் குழுவை தலைமையேற்று செல்லுமாறு பணித்தார். அதுவரை பிரதமரே செல்வதாக திட்டம். திடீரென இவரை போகச் சொன்னவுடன், அந்த இரவு புறப்படும் முன் பிரதமரை சந்தித்து, நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என மாறன் கேட்டார்.
What My Commerce Minister Mr.Maran says is the policy of this country என்றார் பிரதமர். மேலும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் இந்தியப் பிரதிநிதி செல்ல வேண்டும் என தனது தனி விமானத்தைத் தந்து அனுப்பினார்.
விமானத்திலேயே அதிகாரிகளுடன் டிராஃப்ட் ஒப்பந்தத்தை ஒவ்வொரு
பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார் மாறன். இதை எதிர்பாராத துறை அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு இன்றி திணற, முழு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் மாறன்.
அந்த நிமிடத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் இன்றி, துறை வல்லுநர்களிடம்
விவாதித்து இந்தியாவுக்குப் பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார்.
மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, என பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்குள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கினார்.
அத்தனைத் தலைவர்களும் திகைத்து நிற்க, நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் WTO முன்னெடுக்கக் கூடாது என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன் மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழி மொழிய அமெரிக்கா கடும் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது.
நேரடியா பிரதமர் வாஜ்பாயிடம்
அமெரிக்க அதிபரே பேச முயல, பிரதமர் எனது அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. மாறன் முடிவுக்கு எதிராக நான் செயல்பட்டால் அரசே கவிழ்ந்து விடும் என சொல்லி விட்டார்.
தோஹா மாநாடுதான் இதுவரை உலகில் நடந்த சர்வதேச ஒப்பந்த மாநாடுகளில் முதன்முறையாக டிராஃப்ட் ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்டது.
தங்களது ஒப்புதல் இல்லாவிட்டால், அமெரிக்காவே நினைத்தாலும் எந்தவொரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான்.
உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அரசியல் காழ்ப்புணர்வுகளை விடுத்து, ஒரு இந்தியனாக, தமிழனாக நாம் கொண்டாட வேண்டிய ஆளுமை முரசொலி மாறன்.
அவர் உன்னிப்பாக கவனித்து செய்த ஒப்பந்தத்தின் விளைவுதான் இன்று அமெரிக்க அதிபர் அத்தியாவசிய மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு நிற்பது. இல்லாவிடின் அது ஒருவழிப் பாதையாக இருந்திருக்கும். இன்று மோடிக்கு அந்த தொலைபேசி அழைப்பும் வந்திருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக