வெள்ளி, 4 ஏப்ரல், 2025

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:


1. அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது:
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு தடை), மற்றும் 25 (மத சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாகும்.

2. மத சுதந்திரத்தில் தலையீடு:
வக்ஃப் என்பது இஸ்லாமிய மரபில் தொண்டு நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்படும் சொத்து. இதை நிர்வகிக்கும் / முடிவெடுக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, மத விவகாரங்களில் அரசு தலையிடுவதாகும்.

3. பாகுபாடு மற்றும் ஒருதலைப்பட்சம்:
மசோதா பாகுபாட்டுடன் ஒருதலைப்பட்சமாக முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து, அவர்களது சொத்து உரிமைகளையும் தனிச்சட்டங்களையும் பறிக்க முயல்கிறது.
இராணுவத்திற்கும், இந்திய ரயில்வே - யுக்கும் அடுத்த நிலையில் அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கும் அமைப்பாக வக்ஃப் வாரியத்தை பாஜக அரசு காட்டுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து  மசூதிகள், தர்காக்கள், கல்வி சாலைகள் போன்றவற்றின் பொதுச் சொத்துக்களைக் தொகுத்து காட்டும் மதிப்பாகும்.
இதே போல் இந்தியா முழுவதும் உள்ள கோயில் சொத்துக்களையும் ஒரு கணக்கில் தொகுத்தால் அது நிச்சயம் ராணுவத்தையும், ரயில்வேயையும் விட அதிகமான அளவு சொத்து மதிப்புடையதாக இருக்கும்.
வக்ஃப் சொத்துக்களை மதிப்பிடும் பாஜக அரசு அவற்றை ஏன் தொகுத்து மதிப்பிடவில்லை ? ஏன் அந்த சொத்துக்களின் மேல் அக்கறை காட்டுவதில்லை ?

4. வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனை இல்லாமை:
இந்த மசோதாவை உருவாக்குவதற்கு முன் முஸ்லிம் சமூகத்திடமிருந்து போதுமான ஆலோசனை பெறப்படவில்லை. மாறாக எதிர்கட்சிகள் வழங்கிய திருத்தங்கள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு பாஜகவும், அதன் கூட்டாளிகளும் வழங்கிய திருத்தங்களை மட்டும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு இந்த மசோதா ஒருதலைப்பட்சமாக பாஜக அரசால் திணிக்கப்படுகிறது.

5. சொத்து உரிமை மீதான அச்சுறுத்தல்:
வக்ஃப் சொத்துகளை மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, அரசு நிலங்களை உரிமை கோருவது போன்ற முன்மொழிவுகள், இது ஒரு "நில ஆக்கிரமிப்பு முயற்சி"யாகும். இதனால் முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் அரசால் அபகரிக்கப்படலாம். பிறகு மற்ற நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படலாம்

6. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவக் குறைபாடு:
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும், பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
ஏற்கனவே பெண்கள் பிரதிநிதித்துவம் அமலில் உள்ளது. இம்முறை 2 பேர் வரையிலும் என்று Maximum limit குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் அல்லாதவர்களை முஸ்லீம் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கோயில்களின் அறங்காவல் குழுக்களில் முஸ்லீம்களை, கிறிஸ்தவர்களை இதர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன இந்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை சட்டமாக கொண்டு வர  வேண்டும்
புதிய மசோதாவில் மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்) -1, MP க்கள் - 3 max, மாநில வக்ஃப் போர்டு பிரநிதிகள் (சுழற்சி முறையில்) - 3 Max, நீதிபதி / வழக்கறிஞர்- 2 Max, முஸ்லீம் மத அறிஞர்கள் - 2 Max, மத்திய அரசு அலுவலர்கள் -2 Max
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 15 பேரில் 3 பேர் மட்டுமே முஸ்லீம்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் மாநில வக்ஃ போர்டுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்). -1, MLA.க்கள் 1 - 2., நியமன முஸ்லீம் உறுப்பினர்கள் - எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை
நீதிபதி / வழக்கறிஞர்- 1 , முஸ்லீம் மத அறிஞர்கள் 1 - 2, கலெக்டர் IAS கிரேடு - 1
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 11 பேரில் 5 பேர் மட்டுமே முஸ்லீம்கள் ( நியமன உறுப்பினர்கள் 2 உட்பட)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வது மத்திய, மாநில அரசுகளே.
பாஜக ஆளும் மாநிலங்களில் யாரை நியமனம் செய்வார்கள் என்பது ஊரறிந்தது..
மொத்தத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை குறைவதால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கு பாதகமாக அமையும் என்பது அச்சத்தை தருகிறது

7. அரசியல் நோக்கம்:
இந்த மசோதா முஸ்லிம்களை அடக்குவதற்கும், அவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும், அரசியல் லாபம் தேடுவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஆளும் பாஜக தன் RSS தலைமையின் Agenda வை எடுத்துக் கொண்டு குடியுரிமை சட்டம் CIA, முத்தலாக் சட்டம், ஹிஜாப் கட்டுப்பாடு, பசு வதை சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹலால் உணவு பிரச்னை, நகர் பெயர்கள் தெருப் பெயர்கள் மாற்றம், மசூதிகளை இடித்து கோயில்களாக்குவோம் என்ற கூச்சல், ரம்ஜான் பண்டிகை விடுமுறை ரத்து, மசூதிகளை போர்வையால் மூடி விட்டு வீட்டிலேயே தொழுது கொள்ள யோகிநாத் உத்தரவு, எதிர்த்து குரலெழுப்பும் முஸ்லீம் வீடுகளை மட்டுமே இடித்துக் தள்ளும் புல்டோசர் நடவடிக்கைகள் என்று தொடர்ந்து முஸ்லீம் விரோத செயல்களையே மேற்கொண்டு வரும் பாஜக சொல்லும் காரணங்களை யாராலும் நம்ப முடியாது.
இது முஸ்லீம்கள் நலனுக்காக, முஸ்லீம் பெண்களின் நலனுக்காக என்று பாஜக அரசு சொல்வது ஆடு நனைகிறதே என்று ஓநாய் நீலிக் கண்ணீர் வடிக்கும் கதைதான்


8. நீதித்துறை அதிகாரத்தில் மாற்றம்:
வக்ஃப் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அவற்றின் தீர்ப்புகளை இறுதியானதாகக் கருதாமல், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது, நீண்டகால வழக்குகளை அதிகரிக்கும்.

இன்னும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்க்க பல காரணங்கள் இருக்கின்றன. கட்டுரை நீளும் என அஞ்சி தவிர்க்கிறேன்

AM நூர்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...