தமிழக அரசியலில்
பாஜகவின் திட்டங்கள்
எங்கேயும் , எப்போதும், எதிலும் இரண்டு இருக்கும் என்பது இயற்கையின் நியதி மூன்றாவது என்பது இரண்டிற்கும் இடைப்பட்டது என்று சொல்லலாம். இதை தவறிய இயற்கை, இயற்கை மீறல் என்றும் சொல்லலாம்
எல்லாமே இப்படி ஜோடி, ஜோடியாய் இருத்தல் என்பது தவிர்க்க இயலாதது.
தமிழக அரசியலிலும் இந்த இரண்டு என்பது இருக்கிறது.
திமுகவும், அதிமுகவும் இரு துருவங்கள்
இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும். அதே சமயம் மூன்றாவது ஒரு கட்சியை இங்கே அனுமதிக்காது.
இது கடந்த 50 வருட தமிழக அரசியல்.
சட்டமன்றத்தில் எதிர் கட்சி அந்தஸ்தை இழந்திருந்த காலத்திலும் கூட மக்கள் மன்றத்தில் இந்த இரு கட்சிகளும் செல்வாக்கோடு இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன.
கட்சித் தலைமை வெற்றிடமாகும் போது காலத்தின் கட்டாயத்தில் இன்னொரு தலைமை அந்த இடத்தை நிரப்பி வந்திருக்கிறது.
அண்ணாவின் மறைவுக்குப் பின் பல போட்டிகளுக்கு இடையில் கலைஞர் தலைமை பொறுப்புக்கு வந்தார்,
எம் ஜி ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா அவ்விதமே பல போட்டிகளுக்கு இடையில் தலைமை பொறுப்புக்கு வந்தார்
கலைஞர் மறைவுக்கு பின் ஸ்டாலின் எந்த வித போட்டியும் இல்லாமல் தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார்
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் இன்றைய முதல்வர்பழனிச்சாமி பல போட்டிகளுக்கு இடையில் தலைமை பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார். இன்னமும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் போட்டி அரசியல் நடந்து வருகிறது.
இந்தப் போட்டி அரசியலை பின்னிருந்து பாஜக நடத்தி வருகிறது.
இப்போதைக்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட பாஜக 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலையும், ஆட்.சியையும் மனதில் கொண்டு பாஜக திட்டம் தீட்டி அதை இப்போது இருந்தே செயல்படுத்தி வருகிறது.
பாஜகவின் திட்டங்கள் பல இருக்கலாம். அவற்றுள் இவையும் இருக்கலாம் என்ற கணிப்பில் சில கணிப்புக்களை கீழே காணலாம்
PLAN - A:
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பாஜக தான் அதிமுகவின் பின்புறம் இருந்து கொண்டு மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.
இனியும் அதையே தொடர அதிமுகவுடன் பாஜக கூடவே சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து 2021 தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து போட்டியிட திட்டம் வைத்திருக்கிறது.
தி மு க ஆதரவு ஓட்டுக்களை, அதாவது வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக விழும் அதிருப்தி ஓட்டுக்களை சிதறடிக்கச் செய்யும் வேலையைச் செவ்வனே செய்ய பாஜகவின் B டீம் கட்சிகளான நாம் தமிழர், மய்யம், பெயர் வைக்கப்படாத ரஜினி கட்சி, உவைசியின் மஜ்லீஸ் கட்சி போன்றவை இறக்கி விடப்பட்டுள்ளன.
இப்படி ஓட்டுக்கள் சிதறுவதால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணி வெல்லும். EVM ரிசல்டுக்கு இது ஒரு லாஜிக் ஆக இருக்கும்.
ஆனாலும் அறுதிப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான எம்.எல்.ஏ க்களுடன் அதிமுக இருக்கும். அதற்கு பாஜக அல்லது அதன் ஆதரவு அல்லக்கை கட்சிகளின் தயவு தேவைப்படும்.
இப்படி மறைமுகமாக அதிமுக ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை பாஜக ஆட்சி செய்யும்.
இது PLAN - A
PLAN - B:
திராவிடகட்சிகளை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்து அவர்களை வெல்ல முடியாது என்பதை பாஜக புரிந்து கொண்டு விட்டது.
ஜாதி அரசியல் செய்ய முடிகிற தமிழகத்தில் மதவெறியை கிளறி மத அரசியல் செய்வதிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ண முடியாது என்பதையும் பாஜக புரிந்து கொண்டு விட்டது.
பக்தி வேறு, மதவெறி வேறு என்பதைப் பிரித்து அறிந்து கொண்டவர்கள் தமிழக மக்கள் என்பதையும் தாமதமாக பாஜக புரிந்து கொண்டிருக்கிறது.
இங்கு திராவிட எதிர்ப்பை விட பாஜக எதிர்ப்பு அரசியல்தான் செல்லுபடியாகும் என்பதையும் புரிந்து கொண்டு விட்டது.
அதற்காக அடுத்த கட்ட காட்சியை அரங்கேற்ற உள்ளது.
அதன்படி அதிமுக, பாஜக மோதிக் கொள்ளும் நாடகம் ஆரம்பமாகி விட்டது. அதிமுகவின் தலைமையை ஏற்க மறுக்கிற பாஜகவை அதிமுகவின் ஒரு பிரிவு இனி தீவிரமாக எதிர்க்கும்.
இதன் விளைவுகளைப் பார்த்து விட்டு படிப்படியாக பாஜக எதிர்ப்பு அரசியல் அதிமுகவில் வலுக்கும்.
மண்ணின் மைந்தர்களான ஓபிஎஸ்-சும், ஈபிஎஸ்-சும் கடுமையாக பாஜகவை எதிர்த்து வீரபுருஷர்களாகக் காட்டப்படுவார்கள்.
பாஜகவை எதிர்ப்பதில் திமுகவை விட ஒரு படி மேலே போய் குரல் கொடுப்பார்கள்.
மக்களும் மயங்கிப்போய், குழம்பிப் போய் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறி வாக்களிப்பார்கள்.
B டீம்களும் ஓட்டுக்களை சிதறடிக்கும் வேலையினைச் செய்து முடிப்பர்.
EVM ரிசல்டுகளுக்கு இவை ஒரு லாஜிக் ஆக இருக்கும்.
அதிமுக குறைந்த மெஜாரிட்டியில் வெல்லும்.
தேர்தலுக்குப் பின் அதிமுக தன் பாஜகவுடன் நட்பு பாராட்டத் தொடங்கும்.
பாஜக மறைமுகமாக மீண்டும்ஆட்சி செய்யும்.
இது BJP PLAN B
இந்தத் திட்டம் சென்ற தேர்தலில் ஜெயலலிதா மற்றும் மோடியால் செயல்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
பாஜகவைக் கூட்டணியால் சேர்த்துக் கொண்டால் தனக்கும் சேர்த்து ஓட்டு விழாது என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா, சோ வின் ஆலோசனையினபடி பாஜக தவிர்த்த இதர சிறு கட்சிகளை தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டு நின்றார். தன்னுடைய இரட்டை இலை சின்னத்திலேயே தன் கூட்டணிக் கட்சிகளை நிற்க வைத்தார்.
திமுகவுக்குப் போகிற அதிமுக அரசின் அதிருப்தி ஓட்டுக்களைச் சிதறடிக்க மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது.
தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.
இது இப்பொழுதும் நடக்கலாம்.
காலங்கள் மாறும், ஆனால் காட்சிகள் மாறாது.
பாஜகவின் B டீம்களிலும் பாஜக எதிர்ப்பு அரசியல் பெரிதாக நடக்கிறது.
B டீம் கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு அல்லது அதன் மற்ற கட்சிகளுக்கு கட்சித் தாவல் நடக்கிறது.
மய்யத்தின் பொதுச் செயலாளர் பாஜகவுக்குத் தாவுகிறார்.
நா.த.க விலிருந்து அதிமுகவுக்கு கலியாண சுந்தரம் தாவுகிறார்.
இன்னும் பல கட்சித் தாவல்கள் இதே போன்று நடக்கும்.
இது பாஜகவும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிற செய்தியை ஊருக்குள் கொண்டு செல்லும் முயற்சி
இவை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாகத்தான் தெரிகிறது.
மண்டையை மறைத்தவன், கொண்டையை மறைக்க மறப்பது விரைவில் தெரியும்.
இப்படிப் பலப் பல திட்டங்கள் பாஜகவிடம் இருக்கலாம்.
அவற்றை வெல்லும் திட்டங்கள் தி.மு.க வசம் இருக்கட்டும்.
மாநில சுயாட்சியை, உரிமையைக் கேட்டு இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது தி.மு.க. தான்
மீண்டும் அந்தக் குரல் எழுப்ப வேண்டிய சூழலை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
அடிமை அரசு எஜமானர்களுக்கு சேவகம்தான் செய்யும்.
திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே மக்களுக்கு சேவகம் செய்யும்
உரிமைக்குக் குரல் கொடுக்கும்.
ஊருக்குள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
நல்ல பல திட்டங்கள் நாட்டுக்கு வேண்டும்
அதற்கு திமுக ஆட்சியில் அமர வேண்டும்
அதற்கு ஆதரிப்பீர் திமுக கூட்டணியை
நாள் : 26.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக