செவ்வாய், 24 டிசம்பர், 2024

பெரியார் யார் பக்கம் ?

தந்தை_பெரியார் தான் யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள்...

நான் ஒரு நாட்டுக்காரனோ, ஒரு இனத்துக்காரனோ, ஒரு மதத்துக்காரனோ, ஒரு ஜாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது... 

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன். 

ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய நாட்டிற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாட்டை எதிர்த்து போராடுவேன்.!

அந்த நாட்டிற்குள் மதங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரு மதத்தினை, ஒருமதம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய மதத்திற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதத்திற்கு எதிராக போராடுவேன்.!

அந்த மதத்திற்குள் பல ஜாதிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒரு ஜாதியை, ஒரு ஜாதி ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய ஜாதிக்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஜாதிக்கு எதிராக போராடுவேன்.!

அந்த சின்ன ஜாதிக்காரன் ஒரு தொழிற்சாலையை வைத்து நூறு தொழிலாளர்களை அடிமைப்படுத்தினால் நான் அந்த தொழிலாளர்கள் அருகில் நின்று சின்னஜாதி முதலாளியை எதிர்த்து போராடுவேன்.!

அங்கே பணியாற்றக்கூடிய தொழிலாளி தன்னுடைய வருவாயில்தான் தன் குடும்பம் நடக்கிறது என்று சொல்லி தன் மனைவியை அடிமைப்படுத்தினால் அந்த பெண்ணிற்கு அருகிலே நின்றுகொண்டு அந்த கூலி தொழிலாளியையும் எதிர்த்து போராடுவேன்.!

எனக்கு தேவை யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதுதான் என்பதை தவிர வேறொன்றுமில்லை...


நன்றி : இளங்கோ மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...