ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

திமுக இந்து விரோதக் கட்சியா?

 

திமுக இந்து விரோதக் கட்சியா?

திமுக என்றாவது அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை

திமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை.

திமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா?

இல்லை.

திமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை.

இந்துக்கள் கொண்டாடும் இது மாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது.

தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.

இந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில்யோசிக்க வேண்டும்

திமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வுஎன்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது

அப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் போகவில்லை?

ஏன் என்றால்விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தமிழ்நாட்டில்கலாச்சாரமே கிடையாது.அதை புதிதாய் உருவாக்கி பெரிதாக்கியவர்கள் இந்துத்துவா என்றமத அடிப்படைவாதிகள் ஆவர்

ஒருவேளை இந்துக்களாகிய நாம் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று விரும்பினால் அதை திமுகவிடம் நியாயமாக வலியுறுத்தும்போது நிச்சயம் திமுகவே இந்து அறநிலையத் துறை சார்பாக பெரிய விநாயகர் ஊர்வலம் நடத்தி நம்மை விநாயகர் வழிபாடு செய்ய வைக்கும்

ஆனால் அதே சமயம் மற்றவர்கள் விநாயகர் ஊர்வலம் என்றுமதவெறி பரப்பும் செயலுக்கும் அரசு தடைவிதித்து,அரசே முன்னின்று மாபெரும் ஊர்வலம் நடத்தும்.அது உங்களுக்கு சம்மதமா?      என்ன வேண்டாமா?அப்படி ஒரு ஊர்வலம் நடத்த இந்து அடிப்படைவாதிகள் நிச்சயம் சம்மதிக்கமாட்டார்கள்.காரணம் அவர்கள் ஊர்வலம் நடத்துவதே மதத்தின் பெயரால் மக்களை தூண்டுவதற்கு மட்டும்தான்

ஒணம் ஒரு இந்து பண்டிகை என்று எடுத்துக்கொண்டால் அதற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்தவர் டாக்டர்கலைஞர் கருணாநிதி

இதை விட இந்துக்களுக்கு இந்துக்களின் உணர்வுகளுக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்

இந்து மதத்தை ஒருவர் பின்பற்ற நிச்சயம் திமுக தன் முழு ஆதரவையும் கொடுக்கும்.

( கோவில் விழாக்கள் தேரோட்டம்)

ஆனால் இந்து மதத்தினால் மத அடிப்படைவாதத்தை பரப்புவதை திமுக

இந்து மத அடிப்படைவாதம் என்றில்லை

ஐரோப்பிய,அமெரிக்க சமூகத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவையும், கர்த்தரையும், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதற்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள்.

அதனால்தான் அவர்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

பெரும்பான்மை மதத்தவரின் மதத்தை முதலில் பகுத்தறிவு கொண்டு ஆராய்வது அந்த அந்த பிராந்திய வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் எந்த கட்சியும் செய்யக் கூடிய ஒன்றுதான்

ஆனால் அதற்காக பெரும்பான்மை மதத்தவரின் மத உரிமையில் தலையிடாது

உங்கள் வீட்டு குழந்தை சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் வயிறு அழற்சி வரும் என்பது உங்கள் கொள்கை.

ஆனால் அது சாப்பிடும் போது அதை பிடுங்கி எறிய மாட்டீர்கள்.

காரணம் அது சாக்லேட் சாப்பிட அதற்கான உரிமை எப்போதும் உண்டு.

அதே கணக்குதான் திமுகவின் பகுத்தறிவு கொள்கையும்.

மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இருக்க வேண்டும் என்பது திமுகவின் கொள்கை.

ஆனால் மக்களுக்கு அவரவர் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, அந்த உரிமையை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதையும் திமுக உணர்ந்தே இத்தனை வருடங்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறது

ஆகவே ஒபிசி  இளைஞர்களே கொஞ்சம் யோசியுங்கள்

நம் பெருமை மிகுந்த இந்து மதத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை

மூளைச்சலவை செய்பவர்கள் நம் ஒட்டை வாங்கிக் கொண்டு தமிழகத்தில் தமிழை அழித்து இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள்

திமுக என்னும்“சமூக ஒற்றுமை மற்றும் சமூகநீதி மற்றும் மத நல்லிணக்க” பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறிக்காதீர்கள்

கொஞ்சம் யோசிப்போம்

நன்றி: சு. புகழேந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...