முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....
திரு. டான் அசோக்
அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு #வரலாறு இருக்கிறது.
அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின்.
கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரம் வந்ததா?
வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது?
அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா.!
மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து,
'சோ' போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட "ஸ்டாலினை எல்லாம் வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது" எனச் சொல்ல வைத்தார் கலைஞர்.
கலைஞர் ஓய்விற்குப் பின்,
அந்த ஓய்வை ஒட்டி பாஜக வும்/அதிமுக வும் செய்த அரசியல் அநாகரீகங்களை எல்லாம் எதிர்நோக்கி,
கடமையுணர்ச்சி மிக்க ஒரு மகனாய்,
பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு தலைவனாய் திமுக விற்கு நின்று கலைஞர் சமாளித்து தன் தந்தையை சாவிலும் வெல்ல வைத்தது ஸ்டாலின்.
அப்படிப்பட்ட ஸ்டாலின் இருக்கும் போதே,
ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும்போதே,
கொஞ்சமும் கூச்சப்படாமல், நாக்கில் நரம்பில்லாமல்,
"தமிழ்நாட்டில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது" என்று கூவுகூவென்று கூவினார்கள். சூப்பர்_ஸ்டார் ல் இருந்து நண்டுசிண்டுவரை எல்லோரும் கூவினார்கள்.
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
வட இந்திய தலைவர்கள் எல்லாம் கூட்டணிக் கணக்கில் தோற்றார்கள்.
சுயநலத்தால் வீழ்ந்தார்கள்.
தென்னாட்டில் இருந்து ஸ்டாலின், "ஒற்றுமையாக இல்லையென்றால் பாஜக வுக்கே பலம்" என்றார். யாரும் கேட்கவில்லை.
ஆனால் ஸ்டாலின் முடிவு செய்தார்.
பிரதமர் வேட்பாளர் என ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் குழம்புவார்கள் என்பதால் காங்கிரஸ் கூட அறிவிக்கும் முன் ராகுல் ஐ பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
அதிகப்பிரசங்கித்தனம் என்றார்கள்.
அவசரப்படுகிறார் ஸ்டாலின் என்றார்கள்.
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்தது.
39 இடங்களில் மாபெரும் வெற்றி.
திமுக வுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் எம்பிக்களை தேத்த முடியாமல் கஷ்டப்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் க்கும் கூட எம்.பிக்களை பெற்றுத் தந்தார்.
ஆனாலும் நாங்கள் தலைவர் என ஒப்புக்கொள்வோமா என்ன.?
அவ்வளவு ஈசியா அது.? அதிமுக என்றால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.
திமுக என்றால் ஃபயர் பக்கெட் சேலஞ்ச் அல்லவா.?
மீண்டும் சொன்னார்கள்,
தமிழகத்தில் வெற்றிடம் "உண்டு உண்டு உண்டு" என்று.
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
திமுக தலைவரான முதல் நாளே என்ன சொன்னார் ஸ்டாலின்.?
"எனக்கு கலைஞர் ஐ போல் பேச தெரியாது. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும்..என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்" என்றார்.
தன் பலம் எது என அறிந்திருந்தார்.
ஆனால் திமுக என்றால்,
குயில் கர்ஜிக்க வேண்டும், சிங்கம் பாட வேண்டும் என எதிர்பார்க்கும் உலகம் அல்லவா இது.?
பேசவே வரவில்லை. உளறுகிறார்.
தத்தி என என்னென்னவோ சொன்னார்கள்.
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், மூளைச்சலவை செய்யப்பட்ட சூத்திரர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்துக் கொண்டு,
சுடலை என்பது நம் காவல் தெய்வம் என அறியாமல் அதை கேலி வார்த்தையாகப் பேசினார்கள்.
எத்தனை குதூகலம் அவர்களுக்கு.
இலவு காத்த கிளி என்றார்கள்.
இதில் உச்சக்கட்டம், நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த கட்சித் தலைவர் கம் நடிகர் ஒருவர்,
"கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் #ஸ்டாலின் எனச் சொன்னால் போதும்" என்றார்.
அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் கமல்
(தோல்விக்குப்பின் அவருக்குப் புரிந்திருக்கும் அரசியல் என்ன என்பது.?)
அந்த அளவுக்கு ஒரே நோக்கத்தோடு வேலை செய்தார்கள் எதிரிகள்.
ராகுல் ஐ பப்பு என வட இந்திய மக்கள் மனதில் பதிய வைத்ததைப் போல, தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஐ பதிய வைத்து விட மாட்டோமா எனத் துடித்தார்கள்.
அதற்காகவே "தீயாக" வேலை செய்தார்கள்.
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
இதெல்லாம் பத்தாதென்று சைக்கலாஜிக்கல் ஆயுதம் ஒன்றை கையில் எடுத்தார்கள்.
ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் யோகம் இல்லை என்பதுதான் அது.!
"என்ன ஒரு எச்சைத்தனமான யோசனை.?"
Hராஜா, SVசேகர், குட்கா விஜயபாஸ்கர், எடுபிடி எடப்பாடி என அத்தனைப் பேரும் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னார்கள்.
ஏன் இதை ஒப்பாரியாகவே பாடினார்கள் எல்லா இடங்களிலும்.
இதனால் கலங்கிப் போன ஜோசிய நம்பிக்கையுள்ள திமுக வினர் பலரையும்,
இதை நம்பி மமதையில் ஆடிய #அதிமுக வினர் பலரையும் கூட எனக்குத் தெரியும்.
"சுருக்கமாகச் சொன்னால் அடிமைகளுக்கு மற்றும் சங்கிகளுக்கு இதை லைத்து ஒரே கொண்டாட்டம்.!"
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
கொரோனா வந்தது.
அரசுக்கு முன் மக்களுக்கு உதவக் கிளம்பினார்.
நாங்களெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதைத்தோம்.
"அவரை எங்கயும் போக சொல்லாதீங்க ப்ளீஸ்," என உரிமையோடு உதயநிதி வரை சொல்லிப்பார்த்தோம்.
ஆனால் ஸ்டாலின் செய்தது என்ன.?
'ஒன்றிணைவோம்_வா' என்ற பெயரில் உதவுவதற்காகவே ஒரு நிழல் அரசாங்கதை நடத்தினார்.
தன் உயிருக்கு உயிரான களத்தளபதியை பலிகொடுத்து உள்ளம் உடைந்தார்.
ஆட்சியும் அதிகாரமும் இருந்தும் யாருக்கும் உதவாத உதவாக்கரை நாய்கள் பலவும் ஏளனம் செய்தன.
பழிபோட்டன.
அப்போதும் வன்மம் கக்கின.
ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.
தேர்தல் வந்தது.
உழைத்தார். உழைத்தார். உழைத்தார்.
திட்டம் தீட்டினார். கூட்டணி பிரித்தார். தொகுதி வகுத்தார். கணக்குப் போட்டார்.
"நம்மை எளிதாக ஜெயிக்க விட மாட்டார்கள்" எனத் தொண்டர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தார்.
எதிலும் உதாசீனம் இல்லை.
எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு நொடியும் ஓய்வில்லை.
இளைஞர்களே வெட்கப்படும் அளவிற்கு உழைத்தார்.
தேர்தல் முடிந்தது.
முடிவு வந்தது.
ஸ்டாலின் பதில் சொன்னார்,
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...."
சொல்லி விட்டு ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தார்.
சிலர் பதில்களைச் சொல்லிக் காட்டுவதில்லை.!
செய்துக் காட்டுகிறார்கள்.!
வாழ்க எங்கள் முதல்வர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்வாழ்க எங்கள் தமிழ்நாடு
- நன்றி: திரு. டான் அசோக்
"நினைத்ததை முடிக்கும் வரை சிலர் பேசுவார்கள்.
சிலர் பேசாமலேயே ஜெயிப்பார்கள்.?"












