வியாழன், 18 பிப்ரவரி, 2021

திமுகவை ஆதரிப்பது என்பது ஒரு நன்றிக்கடன்

திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்! 

திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்! 

பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம். 

ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம் தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்! 

இங்கே இன்னொரு முரண் என்னவென்றால், சங்கிகள் எந்தளவுக்கு திமுகவை வெறுக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களை புரட்சியாளர்கள் என்று கருதிக்கொள்ளும் தோழர்கள் சிலரும் வெறுப்பது தான்! 

சங்கிகள் திமுகவை எதிர்ப்பது மிக சிப்பிள் லாஜிக். சங்கிகள் திமுகவை தங்கள் கொள்கையின் நேரடி எதிரியாக பார்க்கிறார்கள்.

இயற்கையை காப்போம் என ஒரு பக்கம் நம்மை பேசவிட்டு அவர்கள் நீட், ஐஏஎஸ் என நம் மக்களின் உயர்வை அழிக்க வருகிறார்கள்.

இதில், தோழர்கள் திமுகவிடம் முரண்படுவதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் சிக்கலானது.

சில பெரியாரியர்கள், திமுக பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என குற்றம் சாட்டுவார்கள். 

சில தமிழ்தேசியர்கள், அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது கொள்கை சமரசம் என்பார்கள். 

சில தலித்தியவாதிகள் திமுக சூத்திரர்களின் கட்சி என சொல்லுவார்கள்.

சில பொதுவுடமை தோழர்கள், திமுக முதலாளிகளின் கட்சி என்பார்கள். 

மேலோட்டமாக பார்த்தால், இதில் எல்லாமே உண்மை இருப்பது போலத்தான் இருக்கும். உண்மை இல்லாமலும் இல்லை. 

ஆனால், திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை கையில் எடுத்தது.

திமுக பெரியாரின் இயக்க அரசியல் பாதையை கைவிட்டு, தேர்தல் அரசியலை கையில் எடுத்தது. புரட்சிப்பாதையை கைவிட்டு மக்களாட்சி பாதையை தொடர்ந்தது. 

சூத்திரர்களின் ஆட்சி என சொல்லப்படும் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே அதிகமான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கட்சியிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக. இசைவேளாளர் எனும் மிகவும். ஒடுக்கப்பட்ட ஆள் பலமில்லாத சாதியை சேர்ந்த கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததே சமூகநீதியின் வெற்றி தான். பறையர்களின் கட்சி என்று பேர் வாங்கிய கட்சியான திமுக, இன்று பறையர்களுக்கு கருணாநிதியின் துரோகம் என்று புத்தகம் வெளியிடும் கட்டத்தில் இருப்பதன் பின்னனியை ஆராயவேண்டும்! 

ஐடி கம்பெனிகள், கார்ப்பரெட் கம்பெனிகளை கொண்டு வந்த அதே திமுக தான், ஒரு ரூபாய் அரிசியில்  இருந்து இலவச மருத்துவ காப்பீடு வரை சோசியலிச பாதையில் பயணித்ததும் திமுக தான்! 

பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் பார்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு எதிரான பண்பாட்டை நிறுவியவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களின் பெயர் சிரமணர்கள். அதாவது, சிரமமான பாதையான கடும்தவம், புலால் மறுப்பு, துறவு வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். கௌத்தம புத்தர் தனது ஆரம்ப காலத்தில் இந்த கடுந்தவ வாழ்க்கையை தான் வாழ்ந்தார். பிறகு, தன்னை உணர்ந்த போதி நிலையை அடைந்த பின், புத்தர் தனது பாதையை “மஜ்ஜிம பதிபாதம்” என்ற நடுநிலை பாதைக்கு மாறினார். அதாவது, கடும் தவம் தேவையில்லை. ஒரு எளிய மனிதனும் பின்பற்றும் வகையில் பௌத்தத்தை உருவாக்கினார். அதே வேளையில், தனது

அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, உயிர் நேயம், அறம் சார்ந்த வாழ்வியல் என்பதிலும்..மானுட வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதிலும் எவ்வித சமரசமும் செய்யவில்லை. இன்று உலகெங்கும் பௌத்தம் பரவி வாழ்வதற்கு இந்த நடுநிலை பாதையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

திமுகவின் பாதையும் ஒரு வகையில் இந்த நடுநிலைபாதை தான். அது தான் தேர்தல் பாதை. மக்களாட்சி என்கிற ஜனநாயக பாதை. ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய  சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்! 


- ராஜராஜன் ஆர்.ஜெ


வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி கலைஞர்

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி டாக்டர் கலைஞர் 

*இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 65% ஊழியர்கள் ATT என்று அழைக்கப்படுவார்கள். 

*ATT என்றால் Andra, Telangana and Tamil Nadu.

*TN = "Social + Economical" Development = Kalaignar's Work.

*இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர அடிகோலியது கலைஞர் என்றால் மிகையல்ல.


*இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் தனி முத்திரை பதித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு தான்.


*05-10-1998 இல் தகவல் தொழிற்நுட்பத்துக்கென்றே சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே துறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படத் தொடங்கியது.

*தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார் .


*கலைஞர் முதல் நபராக கணினி வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை செய்தது இன்று நாம் பொருளாதாரத்திலும் பல மடங்கு முன்னேறி உள்ளோம்.

*இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழிற்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) ஒன்றும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 


*இக்கொள்கை தகவல் தொழிற்நுட்பத் தொழில் முனைவோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

*இந்தியாவிலேயே தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கென தனிக் கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலமும் தமிழ்நாடுதான்.


*இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

*2000 ஆம் ஆண்டிலேயே தமிழகம் இந்த நிலையை எட்டிவிட்டது தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளே இதற்குக் காரணம்.


*1998 செப்டம்பர் வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 21,371 பேருக்கு விசா வழங்கியது.

*இதே காலகட்டத்தில் மும்பை தூதரகம் 9,734 பேருக்கும், புதுதில்லி தூதரகம், 5,460 பேருக்கும், கொல்கத்தா தூதரகம் 1,367 பேருக்கும் விசாக்களை வழங்கின. 


*விசா பெற்றோரில் பெரும்பாலானோர் மென்பொருள் பட்டதாரிகள்.


*இது, மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் இருந்துதான் அதிகம் பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்து செல்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.


*2000 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் மென் பொருள் பூங்கா சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறக்கப்பட்டது.


*12 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், தரை தளம், 12 மேல் தளங்கள், 2 தரைகீழ் தளங்கள் கொண்ட டைடல் பூங்காவில் இருந்து தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

*இங்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.


*முழுவதும் குளிர்ப்பதனப்படுத்தப்பட்ட டைல் பூங்காவில் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக “Thermal Energy Storage System” அறிமுகம் செய்யப்பட்டது.

*அப்போது இந்த “மின்தொகுப்பு முறை” உலகிலேயே மூன்றாவது பெரியது அமைப்பாக விளங்கியது.


*இதே போல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டுத் தரத்தினாலான பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழிற்நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கியது.

*இதன் மூலம் டைடல் பூங்கா அமைந்துள்ள சென்னை தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக உயர்வு பெற்றது.


*இந்தச் சாலையில் பல்வேறு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தொழிற்சாலைகளை கழக ஆட்சிட்யின்போதே நிறுவின.

*சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (T.C.S) நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இப்பகுதியில் நிறுவின.

*இங்கிலாந்திலுள்ள World Tel நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தொழில் முயற்சியின் காரணமாக, தமிழகம் முழுவதும் கழக ஆட்சியின்போது 13,000 சமுதாய இணைய மையங்களை அமைக்கப்பட்டன. 


*இதன் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

*கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன், நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத் தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.

*இதன் மூலம், சென்னை மாநகரம் மருத்துவ சுற்றுலா நகரமாக வளர்ச்சியடைந்தது


# கணினி கல்வித் திட்டம் #


*உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான்.

*தற்போது இது, தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.


*மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டம், 187 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டது.

*இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 48,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மென்பொருள் துறையில் வேலை பெறும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக வெளியே வந்தனர்.

*இத்திட்டம், அரசின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஆண்டுதோறும் 60,000 மாணவ மாணவியர் கணினிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றனர்.

*பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கணினி கல்வித் திட்டம்தான், இந்தியாவிலேயே முதலாவது மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


*இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-04-1999 அன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், “சமூகநீதிக் காவலனாகப் பாடுபடும் தமிழக அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படிக்க வருபவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வதாக” தி.மு.க அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தது.

# அரசுத் துறைகள் கணினிமயம் #


*ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்.

*முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தகவல் = கலைஞரின் சாதனைகள் பட்டியல்


Thanks to Chocks   @chockshandle

வியாழன், 11 பிப்ரவரி, 2021

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்

 பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!


மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?
4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்?
6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?
7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்?
இந்தியாவில் பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?
8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன?
10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?
11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
14. மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை  அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?
15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ?
16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?
17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?
18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ?
21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?
இதற்கெல்லாம் பதில் சொல்லிட்டு பின்னர் இரவு நேர போதையில் திமுகவை திட்டுங்கள்,நையாண்டி செய்யுங்கள்..
பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 6 வருட ஆட்சி
மேலே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்..
–Thanks to Smile Designer @riyazdentist 
In Tweeter


ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...