கேள்வி:
அப்படியென்றால் நீங்கள் தி.மு.க கறைப்படியாத கட்சி என்கிறீர்களா?
பதில்:
கறைப்படியாதக் கட்சி, கறைப்படியாதத் தலைவர், கறைப்படியாத மனிதர் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை வெறும் மூடநம்பிக்கைதான்.
ஒருநாள் முழுவதும் பயன்படுத்தும் வெள்ளைவேட்டியைக்கூட கறைப்பாடாமல் காப்பாற்றமுடியாது என்கிறப்போது 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் துளியும் கறைப்பட்டிருக்கவே கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பே இயங்கியலுக்கு எதிரானது.
ஆனால் 60ஆண்டுகளாக தொடர்ந்து தன்னைத்தானே சலவை செய்துக்கொண்டு இன்றளவும் பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தை எந்தவித சமரசமுமின்றி தி.மு.க தன்னந்தனியாகத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும்.
அதனால்தான் பார்ப்பனீய அடிவருடிகள் தி.மு.கவை தங்கள் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறார்கள். அதற்கான விலையாகத்தான் எவ்வித ஆதாரங்களுமற்ற எத்தனையோ பழிகளையும், களங்கங்களையும் தி.மு.க சுமந்துநிற்கிறது.
ஆக, தி.மு.க கறைப்படியாத கட்சியோ இல்லையோ, நம்மை எல்லாம் கரைசேர்த்தக் கட்சி!
Thanks to Choks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக