வெள்ளி, 12 செப்டம்பர், 2025

எஸ்_ஜே_சாதிக்பாஷா

 எஸ்_ஜே_சாதிக்பாஷா


சரித்திரமும், பூகோளமும் பொக்கிஷத்தின் வரலாற்றை எடுத்துரைக்க மறந்த கதை..! 


 ஹஜ் பயணம் செல்ல பணம் இல்லாத ஒரு வருவாய்துறை அமைச்சரின் வரலாற்றை விவரிக்ககிறது இந்த தொகுப்பு.? 

உடுமலைப்பேட்டையில் தொடங்கிய அந்த அமைதி ஆயிரம்விளக்கு வரை எப்படி நீடித்தது.? அந்த வரலாற்றுக்குச் சொந்தகாரர் யார்? மிக நீண்ட வரலாற்றை மறந்த இன்றைய தலைமுறை..! ஆம், அவர்தான் எளிமையின் மறுஉருவம் எஸ்_ஜே_சாதிக்பாஷா..! 

திமுகவை உருவாக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். அண்ணாவின் அன்புத் தம்பி, தலைவர் கலைஞரின் அமைதி நிறை, திமுகவின் கண்டிப்பான பொருளாளர் , 1967, 1971, 1977 மற்றும் 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை தனதாக்கிய தடம்மாறாத் தொண்டன் தான் அய்யா சாதிக் பாஷா அவர்கள்..! 


 மகோரா இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய போது அவரோடு சில பித்தளைகளும் வெளியேறியது. அப்போது, கலைஞருக்கும் திமுகவிற்கும் ஏற்பட்ட சோதனையின் போது கலைஞரின் கரம்பிடித்து நின்றவர் தான் இந்தசாதிக் பாஷா அவர்கள்..! அண்ணா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு துறையின் அமைச்சராகவுவேவ், தலைவர் கலைஞர் அமைச்சரவையில் வருவாய்த்துறையின் அமைச்சராகவும் திறம்பட கையாண்டார்..! 


1977 முதல் 1994 வரை திமுகவின் பொருளாளராகவே இருந்தார். கட்சியின் தேவையற்ற செலவுகளையும் குறைத்து. அதிகளவில் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்சியை வளர்த்த தலையாய தொண்டன் அய்யா சாதிக் பாஷா அவர்கள்..! 


ஒருமுறை இவரின் மனைவி புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவதாக இவரிடம் முறையிட்டார். 

அதற்கு நீ ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென்றால் நான் எங்கையாவது கொள்ளை தான் அடிக்க வேண்டும் என்று கோபமாக கூறினார்.

 பின்னர்,உடுமலைபேட்டை சென்ற கலைஞரிடம் அவர் மனைவி நடந்ததை கூறவே..! உடனே கட்சியின் உயர்நிலை மட்டக் குழுவின் ஆலோசனை பெற்று அன்று முதல் திமுகவின் பொருளாளர் பதவிக்கு ஊதியத்தை அறிவித்தார். பின்பு அவர் மனைவியிடம் அந்த ஊதிய கவரை வழங்கினார் தலைவர் கலைஞர்...! அன்று முதல் திமுகவில் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் தான் ஊதியம் ஆம், அந்த பதவியின் பெயர் பொருளாளர்..


அது மட்டும் இல்லாமல் திமுகவின் உயர்பதவிகளில் கொடிகட்டி பறந்தாலும் இவ்வளவு ஏன் மூன்று முறைக்கு மேல் அதும் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போதிலும் எளிமையின் சிகரமாகவே வாழ்ந்து மறைந்தார் நம் கழகத் தூண் சாதிக் பாஷா அவர்கள்..! 

காமராஜரையும், கக்கனையும் நேர்மையானவர்களாக காட்டிய இந்த பார்ப்பானிய ஊடகங்களும், ஆதிக்க சாதி வெறியர்களும் சாதிக் பாஷாவை காட்ட மறந்தே போனார்கள். காரணம், அவர் திமுக.! 

 MGR எங்களை ஊழல் செய்ய சொல்கிறார் என்று மகோராவின் அமைச்சரவையியே இருந்த SD சோமசுந்திரம் அணுகுண்டை வீசிய அந்தகாலகட்டத்தில் கூட பரபரப்பாக பேசப்பட்ட போதிலும் MGRஐ வள்ளல், கொடையாளி, சிவந்த கரம் என்று போற்றி புகழ்ந்தது பார்ப்பன ஊடகங்கள். ஆனால், சாதிக் பாஷாவை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் என்பது நிதர்சன உண்மை..!  

தன்னுடைய கடைசி காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வாழ்ந்தார் அந்த நேர்மையின் சிகரம். இவரின் கழக உணர்வின் இலக்கணத்தை நாடறியும் வகையில் 1986ஆம் ஆண்டு நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதை "வழங்கி சிறப்பித்தார் தலைவர்க கலைஞர்..! 

ஒரு வழக்கறிஞராக, ஒரு சட்டத்துறையின் அமைச்சரகா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, வருவாய்துறை அமைச்சராக, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக, 20 ஆண்டுகாலம் திமுகவின் பொருளாளராக, தான் எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக போரிட்டு வென்ற ஒருசமநிலைத் தலைவனை நாம் கொண்டாடியேத் தீரவேண்டும்..! 

அவர் மறைந்த போது தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா " கழத்தின் சோதனையிலும், சாதனையிலும், வேதனையிலும், பங்குபெற்று ஊசலாடத இதயத்தை வென்ற ஒரு தலைவனாக நம்மை விட்டு நீங்கா துயில்கொள்ளப் போகும் அந்த அமைதியின் நிறையாம் சாதிக் பாஷாவை நினக்கும் போது என் இதயம் நொறுங்கி விட்டது" என்று கண்ணீர் மல்க விடையனுப்பினார்..! 

திமுக நூற்றாண்டை நோக்கிய தனது பயணத்தில் அறைநூற்றாண்டு வெற்றியை அய்யா சாதிக்பாஷாவே உருவாக்கி விட்டுச் சென்றார்..! 


இந்த சாதிக் பாஷாவை கொண்டாட பல திமுக தொண்டர்கள் வருவார்கள் என உறுதியாக நிற்போம்.!  


வாழ்க உன் புகழ் 🔥🔥🔥



ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...