கலைஞர் சம்பாதித்த வழி
தலைவர் கலைஞர் வாழ்ந்த இந்த வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர்.
அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955.
அப்போது அவரின் வயதே 30 தான்.
அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை. அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை..
முழுக்க முழுக்க சினிமா வருமானம்தான் அவருக்கு .... அதற்கு முன்பே தலைவர் கலைஞரின் 25வது வயதில், 1949இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார் கலைஞர்.
அப்போதே அவரின் சம்பளம் 500 ரூபாய். அக்காலத்தில் அது பெரிய பணம்.
அந்த படத்தில் எம்ஜியாருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் கலைஞர் தான்..
ஒரு காலமும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததில்லை. அது தலைவர் கலைஞரை பற்றி புரளி பேசுபவர்கள் இட்டுக்கட்டும் பல கதைகளில் ஒன்று.
கண்ணதாசன் அவர்களோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும் போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் அவர்கள் வேறு செலவு செய்து விட்டார்..
பிறகு அவர் டிக்கெட் எடுக்காமல் விட்டதைத்தான் தன் "வனவாசத்தில்" சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
அதைத்தான் சில கழிசடைகள் திருட்டு ரயில் என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவிற்கு கலைஞர் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கவில்லை.
ஜெயலலிதா போல வேதா இல்லம், கொடநாடு பங்களா, ஹைதராபாத் திராட்சை தோட்டம், பையனுர் பங்களா போல ஆடம்பரமாக வாழும் இடத்தை கலைஞர் தேடவில்லை.
இறுதிவரை தான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தை மாற்றவில்லை.
மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் மரணிக்கும் வரை இருந்தார் கலைஞர்
மோடியை போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளானையும் சாப்பிட்டு, கவர்மெண்ட் காசில் கண்ட இடங்கள் எல்லாம் கலைஞர் ஊர் சுற்றவும் இல்லை.
நாம் கண்டு முகம் சுளிக்கும் இவர்களை எல்லாம் விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது.
மோடி, ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்களின் ஆடம்பரத்தில் அரை சதவீதம் கூட தலைவர் கலைஞர் ஆடம்பரமாக இருந்தது இல்லை.
அதனால்தான் சாதாரண திருக்குவளை என்கிற குக்கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி என்கிற கருணாநிதி பின்நாளில் உலகத் தமிழினத்தின் தலைவராக உயர்ந்து நிற்கிறார் கலைஞர்..
ஒரு இனத்தையும், அந்த மொழியையும் காக்க போராடுபவனே தலைவன்..
அவரே தலைவர் கலைஞர்
நன்றி @Hotel_Dubakoor
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக