ஞாயிறு, 7 மார்ச், 2021

எவனும் கேட்க மாட்டான்

எவனும் கேட்க மாட்டான்



தமிழ்நாட்டுல அதிமுக காரனா வாழ்வது ரொம்ப சுலபம் !

1965 ல் அண்ணா தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் MGR ஏன் போராடவில்லை தமிழகமே திரண்டு போராடும் போதும் பலர் தூப்பாக்கிச்சூட்டில் செத்த போதும் உங்க MGR மட்டும் ஆயிரத்தில் ஒருவன் (1965), உங்கள் வீட்டு பிள்ளை (1965), கலங்கரைவிளக்கம் (1965), கண்ணிதாய் (1965), பணம் படைத்தவன் (1965), தாழம்பூ (1965), என தமிழக மக்களை பற்றியோ கலவரத்தில் செத்தவர்களை பற்றியோ கவலை படாமல் ஆறு படங்கள் நடித்து படப்பிடிப்பே கதியென கிடந்தது ஏன்னு எவனும் கேட்கமாட்டான்.

பொருளாளர் தானே கணக்கு வச்சிருப்பாரு MGR பொருளாளராச்சே அவர் ஏன் கலைஞர் கிட்ட கணக்கு கேட்டார் அப்படின்னா அது இந்திரா தூண்டுதலில் நடந்த நாடகம்தானேன்னு யாரும் கேட்க மாட்டாங்க.

கச்சத்தீவை இந்திராகாந்தி கொடுக்கும் கலைஞர் எதிர்த்து போராடினாரே MGR அதை எதிர்த்து ஏன் ஒரு அறிக்கை கொடுக்கவில்லை மூச்சுகூட விடவில்லையே, நேற்று இன்று நாளை (12.07.1974)  124. உரிமைக்குரல் (07.10.1974)  125. சிரித்து வாழ வேண்டும் (30.11.1974) என்று லதாவோடு டுயட்டுதானே பாடிக்கொண்டு சுற்றினார் என்று எவனும் கேட்கமாட்டானுங்க.

மின்சார கட்டணத்தை குறைத்து கேட்ட விவசாயிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றாரே எம்ஜிஆருன்னு எவனும் கேட்க மாட்டான்

எம்ஜிஆர் மீது கேரளாவுக்கு எரிசாராயம் கடத்தியதில் ரே என்ற விசாரனை கமிஷனின் விசாரனை நடந்ததாமே என்று எவனும் கேட்க மாட்டான்.

அமைதியாக நடந்த 89 சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் பட்ஜெட்டை படித்துக்கொண்டிருந்த போது ஏற்கனவே போட்ட திட்டப்படி "டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்" என்று குரல் கொடுத்து கிரிமினல் முதல்வர் இவர் குத்துங்கடா என்று சண்டையை தொடங்கி வைத்து கலைஞர் கையில் இருந்த பட்ஜெட் பேப்பரை பிடுங்கி வீசி அவரது மூக்கு கண்ணாடியை பிடுங்கி வீசி திட்டமிட்ட படி தனக்குதானே சேலையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து மொத்த பழியையும் திமுக மேல் போட்டீங்களேன்னு எவனும் கேட்க மாட்டான்.

ராஜீவ்காந்தி மரணமடைந்த ஸ்ரீபெரும்புதூர் மீட்டிங்கில் கூட்டணி கட்சி தலைவரான ஜெயலலிதாவும் தோழி சசியும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எவனும் கேட்கமாட்டான்.

ஜெ வாங்கிய ஒரு ரூபாய் சம்பளத்தில 900 ஏக்கர் கொடநாட்டு பங்களா வாங்க முடியுமான்னு எவனும் கேட்க மாட்டான், கங்கை அமரனை மிரட்டி பையனூர் பங்களாவை வாங்கியதை எவனும் கேட்கமாட்டான்.

சந்திரலேகா என்ற கலெக்டர் முகத்திலயே ஆசிட் வீசிட்டீங்களேடான்னு எவனும் கேட்டு பொங்க மாட்டான்.

ஏழு கழுதை வயசுல மகனை தத்தெடுத்து 100 கோடியில கல்யாணம் பன்ன காசு ஏது? ஜெவை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகைள் யாரும் இத்தனை செலவில் திருமணம் பன்னலையேன்னு கேட்கமாட்டான்.

அந்த கல்யாணத்தால பாலு ஜுவல்லரின்னு ஒரு கடையையே அழிச்சி ஓனரை கொன்னுட்டீங்களேன்னு கேட்க மாட்டான்.

டான்சி நிலத்தை வாங்கிட்டு கையும் களவுமா பிடிபட்ட பிறகு அது என் கையெழுத்தே இல்லைன்னு ஜெயலலிதா ஏன் பல்டி அடித்தார்னு எவனும் கேட்கமாட்டான்.

மகாமகத்தில் 100 பேர் சாக காரணமா இருந்தது ஜெயலலிதா தானேன்னு எவனும் கேட்க மாட்டான்.

தாலிக்கு தங்கம் தறேன்னு சொல்லிட்டு தாலியை அறுக்க மிடாஸ் நடத்தி மொத்த கொள்முதலும் மிடாசிலேயே செய்தாரே இவரா புரட்சிதலைவின்னு எவனும் கேட்க மாட்டான்.

சாகுறதுக்கு இரண்டு வருசத்துக்கு முன்பு கூட 1000 கோடி ரூபாய்க்கு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்குகளை கொண்ட ஜாஸ் சினிமா வளாகத்தை வாங்கிட்டு செத்திருக்காரேன்னு எவனும் கேட்க மாட்டான்.

சொத்துக்குவிப்பு வழக்குல தண்டனை பெற்றவருக்கு 80 கோடி ரூபாய் மக்கள் பணத்தில சமாதி கட்டலாமா இது நியாயமான்னு எவனும் கேட்க மாட்டான்.

ஜெயலலிதா நடிப்பு தொழிலை விடும்போது ஐதராபாத் திராட்சை தோட்டமும் போயஸ் தோட்ட வீடும்தானே இருந்தது சசிகலாவுக்கு. அதுகூட இல்லையே பிறகு எப்படி 2017 ம் ஆண்டு மத்திய அமலாக்கதுறை 190 இடங்களில் ரெய்டு நடத்தும் அளவுக்கு சொத்துக்கள் வந்தது என்று எவனும் கேட்க மாட்டான்.

கலைஞர் சமாதியில தயிர்வடை படைத்ததை முதல் பக்கத்தில் எழுதுகிற பத்திரிக்கை கூட ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்த அப்போல்லோ ஆஸ்பத்திரி CCTV கேமராக்களை யார் அகற்றினார்கள் என்று கேட்க மாட்டான்.

மூன்று கன்டைனரில் பிடிபட்ட 570 கோடி பணம் ஜெயலலிதாவுதுன்னு தெரிந்தும் கூட பணம் எப்படி வந்ததுன்னு கேட்டு எழுதமாட்டான்.

கொடநாட்டு கொள்ளை மற்றும் தொடர் கொலைகளில் எடப்பாடிக்கு உள்ள தொடர்புகளை பற்றி எவனும் கேள்வி கேட்கமாட்டான.

மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக கயவர்களை இப்படி அநியாயமாக எம்ஜிஆர் பிறந்தநாளில் விடுதலை செய்றீங்களேன்னு எவனும் பொங்க மாட்டான்

அதிமுகவின் அத்தனை மந்திரிகள் மீதும் ஊழல் புகார் இருந்தாலும் அதைபற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இதேபோல இன்னும் எழுத அதிமுகவின் ஆயிரக்கணக்கான ஊழல்களும் வன்முறைகளும் உள்ளது ஆனாலும் அதிமுகவை யாரும் கேள்வியே கேட்கமாட்டார்கள்.

இதுவே திமுககாரனா வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம், எங்கோ எவனோ ஒரு தொண்டன் பிரியாணி கடையில தகராறு செய்தாலும் அதற்கு பதில் திமுக தலைமையே சொல்லியாகனும்?


- Jagan in Tweeter

தமிழ்நாட்டுல அதிமுக காரனா வாழ்வது ரொம்ப சுலபம் !




ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...